India
“ரயிலை யாரோ கடத்துறாங்க.. காப்பாத்துங்க..” : வழிமாறி சென்ற ரயிலால் பதறிபோன பயணிகள் - என்ன ஆனது ?
டெல்லி நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து யஷ்வந்தபூர் செல்லும் சம்பர்க் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று வழக்கம்போல நிஜாமுதீன் ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளது. இந்த வழித்தடத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் ரயில் வேறு வழியாக சென்றுள்ளது.
இந்த நிலையில் ரயில் வழக்கமாக செல்லும் வழியில் செல்லாமல் வேறு வழியில் சென்றதால் பயணிகள் சிலர் அச்சமடைந்துள்ளனர். அதில் ஒருவர் ரயில் வேறு யாரோ ஒருவரால் கடத்தப்பட்டதாக நினைத்து மிகவும் அஞ்சியுள்ளார்.
உடனடியாக, ட்விட்டர் மூலம், இந்திய ரயில்வே மற்றும் செகந்திரபாத் ரயில்வே கோட்டத்தை டாக் செய்த அவர், சம்பர்க் எக்ஸ்பிரஸ் ரயிலை யாரோ கடத்தி செல்வதாக கூறியிருந்தார். இவரது இந்த ட்வீட் சமூகவலைதளத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இவரது இந்த ட்வீட்க்கு செகந்திரபாத் ரயில்வே கோட்டம் பதிலளித்துள்ளது. அதில், காஸிபேட்டா - பால்ரசா இடையே ரயில் தடத்தில் பணிகள் நடைபெற்று வருவதால் சம்பர்க் எக்ஸ்பிரஸ் ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதாகவும், ரயிலை யாரும் கடத்தவில்லை. அதுகுறித்து பயணிகள் யாரும் பயப்பட வேண்டாம் எனக் கூறியுள்ளது.
இதனிடையே போதிய முன்னறிவிப்பின்றி ரயிலின் வழித்தடம் மாற்றப்பட்டுள்ளதாக பயணிகள் சிலர் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும், ரயில் கடத்தப்பட்டதாக பயணி ஒருவர் பதிவிட்டுள்ள ட்வீட் தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
Also Read
-
சாம்பியன்ஸ் டிராபி கோப்பை : இந்தியா பங்கேற்கும் போட்டிகளை ஒரே மைதானத்தில் நடத்த பாகிஸ்தான் திட்டம் !
-
"பாஜகவுக்கு வாக்களிக்க கூடாது"- சமூக மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக்கொண்ட குஜராத் பொதுமக்கள் !
-
ஆளுநர் மீது பாலியல் குற்றச்சாட்டு விவகாரம் - மோடி மவுனமாக இருப்பது ஏன்? : மம்தா பானர்ஜி கேள்வி!
-
அமித்ஷாவை எதிர்த்து போட்டியிடும் வேட்பாளர்களுக்கு கொலை மிரட்டல் : தோல்வி அச்சத்தில் பா.ஜ.க!
-
"28 சதவீத உச்சபட்ச GST வரிவிதிப்பு தேவையா?"- ஒன்றிய பாஜக அரசுக்கு பஜாஜ் நிர்வாக இயக்குனர் கண்டனம் !