India
கடுமையான நோய்த்தொற்று - மாணவர்களை தாக்கிய ’நைரோபி ஃப்ளைஸ்’ பூச்சி.. சிக்கிமில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சிக்கிமில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரியில் படிக்கும் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு தோல் நோய்த்தொற்றுக்கு ஆளாகினர்.
இந்த சம்பவம் அங்கு பெறும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த நோய்த்தொற்றுக்கு காரணம் ஒரு வகை பூச்சி தாக்குதல் என்பது தெரியவந்துள்ளது.
’நைரோபி ஃப்ளைஸ்’ எனப்படும் ஒருவகை பூச்சி தொற்றால் இந்த மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், பூச்சியால் பாதிக்கப்பட்ட ஒரு மாணவரின் கையில் அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருப்பதாகவும் மருத்துவர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
ஆரஞ்சு மற்றும் கருப்பு நிறத்தில் இருக்கும் நைரோபி ஈக்கள் மனிதர்களை கடிக்காது, கொட்டாது என்றாலும், தோலில் அமர்ந்தால் தீக்காயங்களைப் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் கூறப்படுகிறது.
மேலும் இதனால் ஏற்படும் கொப்பளங்கள் வடுக்கள் போன்ற பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், நரம்பு வலி, மூட்டு வலி அல்லது வாந்தியெடுத்தல் போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது சில நேரம் கண் பார்வையும் பாதிக்கப்படலாம் என்றும் சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர்.
Also Read
-
உலகம் உங்கள் கையில் : மாணவர்களுக்காக 40 அரங்குகளுடன் தொழில்நுட்பக் கண்காட்சி தொடக்கம்.. எங்கு? - விவரம்!
-
விளையாட்டு பயிற்றுநர் பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பப் பயன்பாடு தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
சாத்தான் வேதம் ஓதும் அமித்ஷா; ஊழலைப் பற்றி என்ன அருகதை இருக்கிறது? : செல்வப்பெருந்தகை கண்டனம்!
-
ஐ.நா. பெண்கள் அமைப்புக்கும் - தமிழ்நாடு அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்... விவரம் என்ன?
-
வாயை கொடுத்து புண்ணாக்கிக் கொள்ளும் தமிழிசை.. அன்று பால்.. இன்று HCL.. கலாய்க்கும் இணையவாசிகள் - விவரம்!