India
5 ஆயிரம் அடி உயரத்தில் பறந்தபோது திடீரென தீ பிடித்த விமானம்.. பீதியடைந்த பயணிகள்!
டெல்லியில் உள்ள இந்திரா காந்தி உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து மத்திய பிரதேசம் மாநிலம் ஜபல்பூருக்கு இன்று காலை ஸ்பைஸ்ஜெட் விமானம் ஒன்று புறப்பட்டது.
இந்த விமானம் 5000 அடி உயரத்தில் பறக்க தொடங்கிய போது விமானத்தின் ஓட்டுநர் அறை அருகில் இருந்து திடீரென புகை வெளியேறியுள்ளது. இதை விமான சிப்பந்திகள் பார்த்துள்ளனர். விமானத்தில் பயணம் செய்த பயணிகளும் புகை வருவதை பார்த்து அதிர்ச்சி மட்டுமில்லாமல் பீதியும அடைந்தனர்.
மேலும் விமானம் முழுவதும் புகை அதிகமாக வெளியேறி சூழ்ந்ததால் பயணிகளுக்கு மூச்சு விடுவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து விமானம் மீண்டும் அவசர அவசரமாக டெல்லி விமான நிலையத்திலேயே தரையிறக்கப்பட்டது.
அங்கு தயாராக இருந்து விமான நிலைய அதிகாரிகள், உடனே பயணிகளை விமானத்தில் இருந்து பத்திரமாக வெளியேற்றினார்கள். விமானத்தில் எதானல் புகை ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
இது தொடர்பாக ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறும் போது, "விமானத்தின் கேபின் பகுதியில் இருந்து புகை வந்ததை அடுத்து உடனடியாக விமானம் தரைஇறக்கப்பட்டு அனைவரும் பாதுகாப்பாக உள்ளனர். எதனால் புகை வந்தது? என்பது குறித்து ஆய்வு செய்து வருவதாகவும்" தெரிவித்துள்ளார்.
Also Read
-
“உங்களுடன் ஸ்டாலின்” முகாம்கள்! : நேரில் சென்று தீர்வுகள் வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“ரோடு போடச் சொன்னால், நாடு பிடிப்பார்கள் தி.மு.கழகத்தின் தீரர்கள்!” : முரசொலி தலையங்கம் புகழாரம்!
-
“அரசு நிர்வாகத்தின் முதுகெலும்பாக ‘ஆவணங்கள்’ விளங்குகின்றன!” : அமைச்சர் கோவி.செழியன் பேச்சு!
-
பிரபல நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் : கண்ணீரில் திரையுலகம்!
-
“தமிழ்நாட்டிற்கு மிகப்பழமையான கடல்சார் வரலாறுண்டு” : நீலப் பொருளாதார மாநாட்டில் அமைச்சர் எ.வ.வேலு பேச்சு!