India
வெளிநாடு சென்ற கணவன் இறந்ததாக போலி சான்றிதழ்.. ரூ.25 லட்சத்தை சுருட்டிச் சென்ற மனைவி! பின்னணி என்ன?
மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த நுர்ஜமால் ஷேக் என்பவர் வேலைக்காக நீண்ட வருட காண்ட்ராக்ட்டில் சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். அங்கு சில சில மாதங்களில் அவர் மனைவி ஷாஹினா கதும் அவரிடம் பேசுவதை குறைத்துள்ளார்.
நுர்ஜமால் ஷேக் தான் வெளிநாடு செல்லும் முன் தன் பெயரில் இன்சூரன்ஸ் செய்துள்ளார். மேலும் வங்கி கணக்கில் பணமும் வைத்துள்ளார். இதை அறிந்த அவரது மனைவி இன்ஷுரன்ஸ் பணம் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இதற்கான உயிருடன் இருக்கும் தனது கணவர் இறந்துவிட்டதாக போலியாக சான்றிதழ் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதைக் வைத்து இன்ஷுரன்ஸ் பணம் மற்றும் அவரது வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியுள்ளார்.
இந்த சம்பவம் 5 வருடங்களுக்கு பிறகு நாடு திரும்பிய நுர்ஜமால் ஷேக்க்கும் தெரியவந்துள்ளது. உடனடியாக போலிஸை அணுகிய அவர், தன் மனைவி போலி சான்றிதழ் மூலம் வங்கியில் இருந்த பணம் மற்றும் இன்சூரன்ஸ் பணம் என 25 லட்சத்தை எடுத்துக்கொண்டு தலைமறைவாகியதாக புகார் அளித்துள்ளார்.
மேலும், தனது மனைவி வேறொருவருடன் தொடர்பு வைத்து அவருடன் தன் பணத்தை எடுத்து சென்றுள்ளதாக கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!
-
TVK Fails... ! ஆட்சியே அமைக்கவில்லை அதற்குள் : த.வெ.க-வினரின் மூன்று சம்பங்களால் பொதுமக்கள் அதிர்ச்சி!
-
ரவுடிபோல் வாளால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய த.வெ.க MLA : பொதுமக்கள் அதிர்ச்சி!
-
“தமிழ்நாட்டு மக்களுக்கு என்ன குறை வைத்தார் திராவிட நாயகன் மு.க.ஸ்டாலின்?” : முரசொலி தலையங்கம்!
-
”கொளத்தூரின் ஒவ்வொரு தெருவிலும் நான் உருவாக்கிய திட்டங்கள்”- திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!