India
காதலியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்.. உ.பி-யில் ஆச்சரிய சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காதலித்து வந்துள்ளனர். தன்பாலின காதலர்களான இவர்களின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால், இவர்கள் தங்கள் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து இரண்டு பேரில் ஒருவர் தனது பாலினத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்த முடிவை அடுத்து, அந்த பெண் பிரயாக்ராஜியில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மோஹித் ஜெயின் கூறுகையில், "இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்வது இங்கு நடைபெறுவது இதுவே முதல் முறை. 18 மாதங்களுக்குப் பிறகு அந்த பெண் முழு ஆணாக மாறியிருப்பார். தற்போது அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
எத்தனையோ துறைகளில் சாதனை படைத்து வந்தாலும் இன்னும் இந்த சமூகத்தில் தன்பாலின காதலர்களை நாம் ஏற்றுக்கொள்வதே இல்லை. அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களை வெறுக்கவே செய்து வருகிறோம். இந்த நிலைமாற வேண்டும் என்றால் மாற்றுப்பாலினத்தவர்கள் மீதான விழிப்புணர் அதிகமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
சோறா.. இட்லியா.. கல்லா.. சமூகநீதி விடுதியில் மாணவர்களுக்கு நேரும் அவலம் - நடவடிக்கை எடுப்பாரா வன்னியரசு?
-
சிவகங்கையில் அமைச்சர் நிர்மல் குமாரை கண்டித்து ஒட்டப்பட்ட சுவரொட்டிகள்! : நாவடக்கம் தேவை என அறிவுறுத்தல்!
-
“இது நீதியா? நியாயமா? மனிதாபிமானம் கொண்டு பார்த்தால்தான் நீதி தெரியும்!” : பெ.சண்முகம் கண்டனம்!
-
“விவசாயிகளுக்கு நிதி இல்லை; ஆனால், ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு கார்!” : தஞ்சையில் உதயநிதி கண்டனம்!
-
த.வெ.க ஆட்சியில் சட்டமன்றமே ‘ரீல்’சிற்காகத்தான் நடத்தப்படுகிறது! : கனிமொழி எம்.பி விமர்சனம்!