India
காதலியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்.. உ.பி-யில் ஆச்சரிய சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காதலித்து வந்துள்ளனர். தன்பாலின காதலர்களான இவர்களின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால், இவர்கள் தங்கள் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து இரண்டு பேரில் ஒருவர் தனது பாலினத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்த முடிவை அடுத்து, அந்த பெண் பிரயாக்ராஜியில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மோஹித் ஜெயின் கூறுகையில், "இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்வது இங்கு நடைபெறுவது இதுவே முதல் முறை. 18 மாதங்களுக்குப் பிறகு அந்த பெண் முழு ஆணாக மாறியிருப்பார். தற்போது அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
எத்தனையோ துறைகளில் சாதனை படைத்து வந்தாலும் இன்னும் இந்த சமூகத்தில் தன்பாலின காதலர்களை நாம் ஏற்றுக்கொள்வதே இல்லை. அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களை வெறுக்கவே செய்து வருகிறோம். இந்த நிலைமாற வேண்டும் என்றால் மாற்றுப்பாலினத்தவர்கள் மீதான விழிப்புணர் அதிகமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!