India
காதலியை திருமணம் செய்ய ஆணாக மாறிய பெண்.. உ.பி-யில் ஆச்சரிய சம்பவம்!
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு பெண்கள் காதலித்து வந்துள்ளனர். தன்பாலின காதலர்களான இவர்களின் காதலுக்கு அவரது பெற்றோர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளனர். ஆனால், இவர்கள் தங்கள் காதலில் உறுதியாக இருந்துள்ளனர். இதையடுத்து இரண்டு பேரில் ஒருவர் தனது பாலினத்தை மாற்றிக் கொள்ள முடிவு செய்துள்ளார்.
இந்த முடிவை அடுத்து, அந்த பெண் பிரயாக்ராஜியில் உள்ள ஸ்வரூப் ராணி நேரு மருத்துவமனையில் பாலின மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளது அனைவர் மத்தியிலும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து அறுவை சிகிச்சை செய்த மருத்துவர் மோஹித் ஜெயின் கூறுகையில், "இதுபோன்ற அறுவை சிகிச்சை செய்வது இங்கு நடைபெறுவது இதுவே முதல் முறை. 18 மாதங்களுக்குப் பிறகு அந்த பெண் முழு ஆணாக மாறியிருப்பார். தற்போது அவர் முழு உடல் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்" என தெரிவித்துள்ளார்.
எத்தனையோ துறைகளில் சாதனை படைத்து வந்தாலும் இன்னும் இந்த சமூகத்தில் தன்பாலின காதலர்களை நாம் ஏற்றுக்கொள்வதே இல்லை. அவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளாமல் அவர்களை வெறுக்கவே செய்து வருகிறோம். இந்த நிலைமாற வேண்டும் என்றால் மாற்றுப்பாலினத்தவர்கள் மீதான விழிப்புணர் அதிகமாக இருக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
3 ஆண்டுகளாக பாலியல் தொல்லை : முன்ஜாமீன் கோரிய முன்னாள் அமைச்சர் ரேவண்ணா - கர்நாடக அரசியலில் அதிர்ச்சி !
-
மேற்கு வங்க ஆளுநர் மீது பாலியல் புகார் - மோடி கொல்கத்தா நேரத்தில் செல்லும் வெளிவந்த அதிர்ச்சி !
-
மீண்டும் மீண்டும் அவமானப்படும் மோடி! : பொய்களின் மேல் பொய்கள்!
-
"ரிங்கு சிங்கை அணியில் சேர்க்காதது மிகவும் கடினமான முடிவு" - தேர்வுக்குழு தலைவர் அகர்கர் கூறியது என்ன ?
-
தனியார்மயமாக்கலால் குறையும் அரசுப் பணிகள்! : மறைமுகமாக அழிக்கப்படும் இடஒதுக்கீடு!