India
ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி.. விரைந்து காப்பாற்றிய போலிஸ்! -சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
சமீப காலமாக ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து பின்னர் காப்பாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லட்சுமிபாய் ரயில் நிலையத்தில் கணவர் மற்றும் கைக்குழந்தையோடு கர்ப்பிணி ஒருவர் ரயில் ஏற வந்துள்ளார். அப்போது அவர்கள் ஏற வேண்டிய ரயில் நடைமேடையில் இருந்து புறப்பட்டு செல்வதை அறிந்த அவர்கள் அவசரமாக ரயிலில் ஏற முயன்றுள்ளனர்.
அப்போது நிலைதடுமாறிய கர்ப்பிணி ஒருவர் கீழே விழுந்துள்ளார்.அப்போது இதை கண்ட ரயில்வே பாதுகாப்பு போலிஸார் ஒருவர், துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணை பத்திரமாக மீட்டார். இந்த சம்பவம் அங்கு பதைபதைப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் கர்ப்பிணியை காப்பாற்றிய அந்த போலிஸாரை பாராட்டியுள்ளனர்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!