India
ரயிலில் தவறி விழுந்த கர்ப்பிணி.. விரைந்து காப்பாற்றிய போலிஸ்! -சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியீடு!
சமீப காலமாக ஓடும் ரயிலில் ஏற முயன்று தவறி விழுந்து பின்னர் காப்பாற்றப்படும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது உத்தர பிரதேசத்தில் நடந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள லட்சுமிபாய் ரயில் நிலையத்தில் கணவர் மற்றும் கைக்குழந்தையோடு கர்ப்பிணி ஒருவர் ரயில் ஏற வந்துள்ளார். அப்போது அவர்கள் ஏற வேண்டிய ரயில் நடைமேடையில் இருந்து புறப்பட்டு செல்வதை அறிந்த அவர்கள் அவசரமாக ரயிலில் ஏற முயன்றுள்ளனர்.
அப்போது நிலைதடுமாறிய கர்ப்பிணி ஒருவர் கீழே விழுந்துள்ளார்.அப்போது இதை கண்ட ரயில்வே பாதுகாப்பு போலிஸார் ஒருவர், துரிதமாக செயல்பட்டு அப்பெண்ணை பத்திரமாக மீட்டார். இந்த சம்பவம் அங்கு பதைபதைப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை பார்த்தவர்கள் கர்ப்பிணியை காப்பாற்றிய அந்த போலிஸாரை பாராட்டியுள்ளனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !