India
படுக்கை முழுக்க கட்டுகட்டாக நோட்டுகள்.. சோதனையில் சிக்கிய லஞ்ச பணம்: அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்!
பிகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்தவர் ஜிதேந்திர குமார் என்பவர் மருந்து ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் மீது ஏராளமான லஞ்ச புகார்கள் குவிந்தன. இதனால் அவருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நேற்று திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அவர் வீட்டில் இருந்து 1 கிலோ தங்கம் மற்றும் வெள்ளி ஆபரணங்கள், 5 சொகுசு வாகனங்கள், சொத்து ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
மேலும் அவரது படுக்கையில் இருந்து ரூ.3 கோடி ரொக்கத்தையும் கைப்பற்றினர். பின்னர் இந்த சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் இவரது படுக்கை அறை முழுக்க பணம் இருக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதைத் தொடர்ந்து அவர் மேல் வழக்கு பதியப்பட்டு அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். கைதுசெய்யப்பட்ட ஜிதேந்திர குமார் பாட்னாவில் ஒரு பார்மசி கல்லூரியை நடத்தி வருகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
Also Read
-
“அநீதிக்கு எதிராக அனைவரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி - இது மண்ணைக் காக்கும் பரப்புரை” : முரசொலி!
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!