India
பெற்றோரின் செல்போனை ஹேக் செய்த சிறுவன்.. காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலிஸார்! பின்னணி என்ன?
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் ஒரு தம்பதியினர் போலிஸில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில் தங்கள் செல்போன்களை யாரோ ஹேக் செய்துவிட்டதாகவும் வீட்டில் ப்ளூடூத் போன்ற சாதனங்களை வைப்பதாகவும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் போலிஸார் விசாரணையைத் தொடங்கியபோது பெரும் அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதில், அந்த தம்பதியின் செல்போனை ஹேக் செய்ததே அவரது 13 வயது மகன்தான் என்பது தெரியவந்துள்ளது. முதலில் இதனை மறுத்த சிறுவனும் பிறகு இதை ஒப்புக்கொண்டுள்ளார்.
ஆரம்ப கட்ட விசாரணையில் இதை ஒரு ஹேக்கர் சொல்லி செய்ததாகவும், இல்லாவிட்டால் பெற்றோரை கொன்றுவிடுவதாக அந்த ஹேக்கர் மிரட்டல் விடுத்ததாகவும் கூறியுள்ளார். பின்னர் அவரிடம் விசாரணையை தீவிரப்படுத்தியபோது பெற்றோரை பிராங் செய்வதற்காக இந்த செயலை அவர் செய்துள்ளது தெரியவந்துள்ளது.
இது தவிர சிறுவனின் மாமா செல்போனில் இருந்தே இது போன்ற செயலில் ஈடுபட்டதும், இதற்கு மாமாவும் உடந்தையாக இருந்துள்ளதும் தெரியவந்தது. இது தொடர்பாக அந்த தம்பதி புகார் ஏதும் அளிக்காததால் போலிஸார் இது தொடர்பாக நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை. ஆனால், பொதுமக்களுக்கு இது தொடர்பாக எச்சரிக்கை விடுக்கும் விதமாக இதை வெளியிட்டுள்ளனர்.
Also Read
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!
-
அரசுப்பள்ளி குழந்தைகளிடம் கேள்வி.. அடங்காத அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. குவியும் கண்டனங்கள்!
-
நீக்கப்படும் ‘மு’ : “உங்கள் ஆஸ்தான ஜோதிடர் எதுவும் அறிவுறுத்தி உள்ளாரா?” -விஜய்க்கு திமுக இளைஞரணி கேள்வி!
-
7-வது முறையாக.. மகளிர் டி20 சாம்பியனான ஆஸ்திரேலியா.. சொந்த மண்ணில் இங்கிலாந்துக்கு தொடரும் சோகம்!