India
ஒடிசா நடிகை மர்மமான முறையில் மரணம்.. பெற்றோர் சொன்ன ‘பகீர்’ குற்றச்சாட்டு - காதலனிடம் போலிஸார் விசாரணை!
ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ரேஷ்மிரேகா. பிரபல தொலைக்காட்சி மூலம் மக்களிடையே தனக்கென தனி இடத்தை தக்க வைத்தவர் ரேஷ்மிரேகா. இந்நிலையில், ரேஷ்மிரேகா சந்தோஷ் பட்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்ட முடிவெடுத்து தங்குவதற்கு என்று வீட்டு ஒன்றையும் வாடக்கைக்கு எடுத்து தேவையான பொருட்களை வீட்டில் வாங்கி வைத்துள்ளனர்.
அடுத்தாண்டு இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிதாக குடியேறிய வீட்டில் ஒருமாதமாக வசித்து வந்த நிலையில், மர்மமான முறையில் ரேஷ்மிரேகா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்துவந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடந்தி வைத்தனர்.
போலிஸார் நடத்திய விசாரணையின் போது, ரேஷ்மிரேகாவை அவரது காதலன் கொலை செய்ததாக அவரது தந்தை குற்றச்சாட்டியுள்ள நிலையில், ரேஷ்மிரேகா தற்கொலை செய்துக்கொண்டா ? அல்லது கொலை செய்யப்பட்ட என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“திராவிட மாடல் ஆட்சிக்கான ஒரு மாபெரும் நற்சான்றுதான் 16% வளர்ச்சி!” : அமைச்சர் தங்கம் தென்னரசு பெருமிதம்!
-
கொளத்தூரில் ரூ.25.72 கோடியில் பேரறிஞர் அண்ணா திருமண மாளிகை!: டிச.18 அன்று திறந்து வைக்கிறார் முதலமைச்சர்!
-
2026 சட்டமன்றத் தேர்தல் : கனிமொழி MP தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு - தி.மு.க அறிவிப்பு!
-
“VBGRAMG-க்கு எப்படி முட்டு கொடுக்கப் போகிறார் எடப்பாடி பழனிசாமி?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“Climate Action, Clean Energy ஆகிய இலக்குகளில் தமிழ்நாடு முதலிடம்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!