India
ஒடிசா நடிகை மர்மமான முறையில் மரணம்.. பெற்றோர் சொன்ன ‘பகீர்’ குற்றச்சாட்டு - காதலனிடம் போலிஸார் விசாரணை!
ஒடிசாவைச் சேர்ந்தவர் பிரபல நடிகை ரேஷ்மிரேகா. பிரபல தொலைக்காட்சி மூலம் மக்களிடையே தனக்கென தனி இடத்தை தக்க வைத்தவர் ரேஷ்மிரேகா. இந்நிலையில், ரேஷ்மிரேகா சந்தோஷ் பட்ரா என்பவரை காதலித்து வந்துள்ளார்.
இவர்கள் இருவரும் திருமணம் செய்துக்கொண்ட முடிவெடுத்து தங்குவதற்கு என்று வீட்டு ஒன்றையும் வாடக்கைக்கு எடுத்து தேவையான பொருட்களை வீட்டில் வாங்கி வைத்துள்ளனர்.
அடுத்தாண்டு இவர்களின் திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புதிதாக குடியேறிய வீட்டில் ஒருமாதமாக வசித்து வந்த நிலையில், மர்மமான முறையில் ரேஷ்மிரேகா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதுகுறித்து தகவலறிந்துவந்த போலிஸார் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து போலிஸார் விசாரணை நடந்தி வைத்தனர்.
போலிஸார் நடத்திய விசாரணையின் போது, ரேஷ்மிரேகாவை அவரது காதலன் கொலை செய்ததாக அவரது தந்தை குற்றச்சாட்டியுள்ள நிலையில், ரேஷ்மிரேகா தற்கொலை செய்துக்கொண்டா ? அல்லது கொலை செய்யப்பட்ட என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!