India
“நூபுர் சர்மா கருத்துக்கு பிரதமர் மோடி வாய்மூடி மௌனமாக இருப்பது ஏன்?” : நாராயணசாமி கடும் தாக்கு!
தமிழகத்தில் ஆதீனங்கள் அரசியலில் தலையிடுவதை, எந்த காலத்திலும் ஏற்று கொள்ள முடியாது என்றும், ஆதீனங்கள் மத கடமையை மட்டும் செய்ய வேண்டும் என புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி, இந்தியாவில் சாதி, மத பேதமில்லாமல் வாழ்ந்து வருகிறோம். பா.ஜ.க மதத்தை வைத்து அரசியல் செய்கிறது. இதனால் பல பகுதியில் மத கலவரம் ஏற்படுகிறது.
நாட்டில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது. பா.ஜ.க.வினர் தூண்டி விட்டுதான், நபிகள் குறித்து நூபுர் சர்மா விமர்சனம் செய்து உள்ளார். அவர் மீது பா.ஜ.க எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. என்னுடைய கருத்துக்கு பா.ஜ.க தலைவர் ஆதரவு தெரிவித்து உள்ளதாக நூபுர்சர்மா கூறி உள்ளார். பிரதமர் மோடி இது தொடர்பாக, வாய்மூடி இருப்பது மன வேதனையை ஏற்படுத்துகிறது.
தமிழகத்தில் ஆதீனங்கள், அரசியலில் நுழைய ஆரம்பித்து விட்டார்கள். அரசியல் வாதிகள் போல பேசுகிறார்கள். அரசை விமர்சனம் செய்கிறார்கள். ஆதீனங்கள் மத கடமையை மட்டும் செய்ய வேண்டும். ஆதினங்கள் அரசியலில் தலையிடுவதை, எந்த காலத்திலும் ஏற்று கொள்ள முடியாது. இது இந்து மதத்திற்கு இழுக்கு ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!