India
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண்ணை உயிருடன் எரித்த குடும்பம்.. ஜார்க்கண்டில் கொடூர சம்பவம்!
ஜார்க்கண்ட் மாநிலம், பென்காபாத் கிராமத்தைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் நேற்று இரவு தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த நபர் அந்த பெண்ணை கடத்திச் சென்றுள்ளார்.
பிறகு அந்த பெண்ணை, பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அப்போது அந்தப் பெண் கூச்சலிட்டதால் அருகே இருந்த கிராம மக்கள் அவரை மீட்க ஓடிவந்தனர். இதைப்பார்த்த அந்த நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
இது குறித்து அறிந்து, அப்பெண்ணின் குடும்பத்தினர் அங்கு வந்து, தங்களின் பெண் என்றும் பாராமல் அவர் மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளனர். இதைச் சற்றும் எதிர்பார்க்காத கிராம மக்கள் தீயை அணைத்து அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதுபோன்று மற்றொரு சம்பவமும் ஜார்கண்ட் மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
கும்லா மாவட்டத்தில் இரண்டு இளைஞர்கள் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் அவர்கள் 2 பேரையும் பிடித்துத் தீவைத்துக் கொளுத்தியுள்ளனர். இதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றொருவர் தீ காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த இரண்டு சம்பவங்களும் ஜார்க்கண்ட் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!