India
பள்ளி முழுவதும் சிவப்பு நிறத்தில் Sorry.. Sorry என்ற வாசகம்.. பீதியை கிளப்பிய நபர்: காரணம் என்ன?
பெங்களூருவில் உள்ள காமாக்ஷிபல்யா பகுதியில் சாந்திதாமா என்ற தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்நிலையில் இன்று இந்த பள்ளியில் சுற்றுச்சுவர்கள் மற்றும் படிகாட்டுகள் என அனைத்து இடங்களிலும் Sorry.. Sorry என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
இதைப்பார்த்த பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பிறகு இது குறித்து போலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. பள்ளிக்கு வந்த போலிஸாரும், முழுமையாக ஆய்வு செய்தனர்.
பின்னர் பள்ளியிலிருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தபோது, இருசக்கர வாகனத்தில் டெலிவரி பாய் வேடத்தில் இரண்டு நபர்கள் செல்லும் காட்சிப் பதிவாகியுள்ளது. இந்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும், காதல் தோல்வியால் பள்ளி மாணவர்களே யாராவது இப்படி எழுதியுள்ளார்களா? என்ற கோணத்திலும் போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி சுவர் முழுவதும் Sorry என எழுதப்பட்டு இருந்த சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
பீகாரை தொடர்ந்து தமிழ்நாடு.. 12 மாநிலங்களில் நடத்தப்படும் SIR.. எந்தெந்த மாநிலங்கள்? எப்போது? - விவரம் !
-
SIR-க்கு ஆதரவு : தமிழ்நாட்டின் உரிமைகளை டெல்லியில் அடகு வைத்த பழனிசாமி கும்பல்- திமுக IT Wing விமர்சனம்!
-
"மதுரை ஆதீனத்திடம் விசாரணை நடத்த எந்தத் தடையும் இல்லை" - சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு !
-
"வாக்குரிமையை பறிக்கும் SIR சதித் திட்டத்திற்கு எதிராக போராடிடுவோம்" - திமுக கூட்டணிக் கட்சிகள் அழைப்பு !
-
“உலகத்தின் வேகத்திற்கு ஈடுகொடுத்து ஓடவேண்டும்! கொஞ்சம் அசந்தாலும்...” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!