India
உண்மையை மறைத்த மாப்பிள்ளை.. தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: காரணம் என்ன?
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமண நிச்சயித்த தேதியில் மணமகனின் குடும்பத்தினர் ஊர்வலமாக திருமணம் நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.
அப்போது, ஊர்வலத்தில் வந்த மாப்பிள்ளை மயங்கி விழுந்துள்ளார். அவர் கீழே விழுந்தவுடன் அவர் வழுக்கை தலையை மறைப்பதற்காக வைத்திருந்த விக்கும் கழன்றி விழுந்துள்ளது. இதனால் மாப்பிள்ளை வழுக்கை தலை என்ற உண்மை பெண்ணின் குடும்பத்தாருக்கும், மணப் பெண்ணுக்கும் தெரியவந்துள்ளது.
இந்த உண்மை தெரிந்த, மணப்பெண் வழுக்கை தலையுள்ளவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர்கள் எவ்வளவு சமாதானம் செய்து அவர் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் நடக்க விருந்த திருமணம் இறுதியில் நின்றுபோனது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டால் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
Also Read
-
73 ஆண்டுகளில் இல்லாத வெப்பம் : ஊட்டிக்கே இந்த நிலையா ? - கொதிக்கும் கோடை வெப்பம் !
-
பள்ளத்தில் கவிழ்ந்த கார் : இரவில் கணவன், மனைவிக்கு நேர்ந்த சோகம்!
-
"களத்தில் என்ன செய்யவேண்டும் என எனக்கு தெரியும்" - விமர்சகர்களுக்கு பதிலடி கொடுத்த விராட் கோலி !
-
”போராடி பெற்ற நமது உரிமைகளை பறிக்கும் மோடி அரசு” : தீஸ்தா சீதல்வாட் குற்றச்சாட்டு!
-
"திறமையற்ற தலைவர் மோடி" - இந்திய பயணத்தை ஒத்திவைத்து சீன பிரதமரை சந்திக்க சென்ற எலான் மஸ்க் !