India
உண்மையை மறைத்த மாப்பிள்ளை.. தாலி கட்டும் நேரத்தில் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்: காரணம் என்ன?
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞருக்குத் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டது. இதையடுத்து திருமண நிச்சயித்த தேதியில் மணமகனின் குடும்பத்தினர் ஊர்வலமாக திருமணம் நடக்கும் இடத்திற்குச் சென்றனர்.
அப்போது, ஊர்வலத்தில் வந்த மாப்பிள்ளை மயங்கி விழுந்துள்ளார். அவர் கீழே விழுந்தவுடன் அவர் வழுக்கை தலையை மறைப்பதற்காக வைத்திருந்த விக்கும் கழன்றி விழுந்துள்ளது. இதனால் மாப்பிள்ளை வழுக்கை தலை என்ற உண்மை பெண்ணின் குடும்பத்தாருக்கும், மணப் பெண்ணுக்கும் தெரியவந்துள்ளது.
இந்த உண்மை தெரிந்த, மணப்பெண் வழுக்கை தலையுள்ளவரைத் திருமணம் செய்து கொள்ள முடியாது என தெரிவித்துள்ளார். அவரது பெற்றோர்கள் எவ்வளவு சமாதானம் செய்து அவர் தனது முடிவில் உறுதியாக இருந்துள்ளார். இதனால் நடக்க விருந்த திருமணம் இறுதியில் நின்றுபோனது. இதையடுத்து மாப்பிள்ளை வீட்டால் அங்கிருந்து கிளம்பிச் சென்றனர்.
Also Read
-
“இரு மாநிலங்களும் ஒன்றிணைந்து செயல்படவுள்ளோம்!” : ஜெர்மனியின் NRW முதல்வரை சந்தித்த முதலமைச்சர் !
-
தேசிய அளவில் 8 விளையாட்டு வீராங்கனைகளுக்கு பணி நியமனம்! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“தொழிலாளர்களுக்கு வாழ்வளிக்கும் Dollar City திருப்பூர் தவிக்கிறது!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
இதுதான் திமுக - சொன்னதையும் செய்திருக்கிறோம் சொல்லாததையும் செய்திருக்கிறோம் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
505 தேர்தல் வாக்குறுதிகளில் 404 திட்டங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்!