India
பள்ளிகளில் பாலியல் குற்றம்.. உச்ச நீதிமன்றம் அளித்த முக்கிய ஆலோசனை.. நக்கீரன் கோபால் மனு மீது உத்தரவு!
பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுக்க வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியதோடு ஒன்றிய அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பாலியல் புகார்கள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக குழுக்களை அமைத்து உத்தரவிடக் கோரி நக்கீரன் ஆசிரியர் கோபால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற போதுகூட பாலியல் குற்றங்கள் நடைபெற்றன. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
நக்கீரன் கோபால் மனு இன்று நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுக்க வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.
மேலும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் பள்ளிகளில் சி.சி.டி.வி கேமிரா அமைக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். பின்னர் ஒன்றிய அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
Also Read
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !
-
பள்ளிக்கல்வி எனும் அடித்தளத்திற்கு வலுசேர்க்கும் திராவிட மாடல் திட்டங்கள்! : பட்டியலிட்ட தமிழ்நாடு அரசு!
-
தமிழக ஆழ்கடலில் ஹைட்ரோ கார்பன் எரிவாயு.. சுற்றுச்சூழல் அனுமதியை திரும்ப பெற வேண்டும் - வைகோ வலியுறுத்தல்!