India
பள்ளிகளில் பாலியல் குற்றம்.. உச்ச நீதிமன்றம் அளித்த முக்கிய ஆலோசனை.. நக்கீரன் கோபால் மனு மீது உத்தரவு!
பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுக்க வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியதோடு ஒன்றிய அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் இது தொடர்பாக நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகளில் பாலியல் புகார்கள் குறித்து மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக குழுக்களை அமைத்து உத்தரவிடக் கோரி நக்கீரன் ஆசிரியர் கோபால் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
அதில், “கொரோனா காலத்தில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெற்ற போதுகூட பாலியல் குற்றங்கள் நடைபெற்றன. இதனைக் கருத்தில் கொண்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் புகார் அளிக்க ஏதுவாக குழு அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.
நக்கீரன் கோபால் மனு இன்று நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது பள்ளிகளில் பாலியல் குற்றங்களைத் தடுக்க வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் ஆலோசனை வழங்கியது.
மேலும் பாலியல் குற்றங்களை தடுக்கும் வகையில் பள்ளிகளில் சி.சி.டி.வி கேமிரா அமைக்கப்பட வேண்டும் என்றும் கருத்து தெரிவித்தனர். பின்னர் ஒன்றிய அரசுக்கும், அனைத்து மாநிலங்களுக்கும் நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டனர்.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!