India
ஒன்றிய அமைச்சர் பங்கேற்ற நிகழ்ச்சியில் திடீரென ஒளிபரப்பான ஆபாசப் படம்.. அரசு அதிகாரிகள் அதிர்ச்சி!
அசாம் மாநிலம் டினசுகியா என்ற பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஒன்றிய இணை அமைச்சர் ராமேஸ்வர் டெலி கலந்துகொண்டுள்ளார். இதில் அரசின் நலத்திட்ட பணிகளையும் அவர் தொடங்கிவைத்துள்ளார். இதையடுத்து இந்திய ஆயில் நிறுவனத்தில் மெத்தனால் கலந்து பெட்ரோல் தயாரிக்கும் புதிய திட்டத்தையும் அமைச்சர் ராமேஸ்வர் டெலி தொடக்கிவைத்தார்.
அப்போது, இந்த திட்டம் குறித்து விளக்கக்கூடிய வைகையில் ப்ரொஜெக்டர் மூலமாக காணொளி ஒன்றி ஒளிபரப்பப்பட்டது. அப்போது திடீரென அந்த வீடியோவில் ஆபாசப் படங்கள் வந்துள்ளது. இதைப்பார்த்து ஒன்றிய அமைச்சர் உட்பட அங்கிருந்த அதிகாரிகள் அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
உடனே அந்த காணொலி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ப்ரொஜெக்டர் ஆபரேட்டடை போலிஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து ஒன்றிய அமைச்சர் ராமேஸ்வர் கூறுகையில், இந்த சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலிஸாரிடம் வலியுறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டின் திட்டங்களுக்கான நிதியை எப்போது விடுவிப்பீர்கள்? கேள்விகளை அடுக்கிய தி.மு.க எம்.பிக்கள்!
-
“வரலாற்றில் இடம்பிடித்த சிலை…மார்க்ஸை வடிவமைக்கும் போது பூரித்தேன்” : நெகிழ்ந்த சிற்பி கார்த்திகேயன்!
-
U19 உலகக்கோப்பை: சூர்ய வம்சியின் அதிரடி ஆட்டம்! இங்கிலாந்திற்கு 411 ரன்கள் இமாலய இலக்கு நிர்ணயம்!
-
6 புதிய சமத்துவபுரங்கள்: சாலை, பாலங்கள்- புதிய திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
ரூ.348.59 கோடி செலவில் அரசு மருத்துவமனை கட்டடங்கள்: மக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார் முதலமைச்சர்!