India
டெல்லியில் அடுக்குமாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்து.. 2 பேர் பலி.. மீட்பு பணிகள் தீவிரம்!
தெற்கு டெல்லி பகுதியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில் உள்ள மூன்று அடுக்குமாடி கொண்ட கட்டடம் சீரமைக்கப்பட்டு வந்தது. இன்று தொழிலாளர்கள் வழக்கம்போல வேலை செய்து கொண்டிருந்தபோது திடீரென கட்டடம் இடிந்து விழுந்து தரைமட்டமானது.
இந்த விபத்தில், கட்டடத்தில் வேலைபார்த்துக் கொண்டிருந்த அனைத்து தொழிலாளர்களும் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த 6 தீயணைப்பு வாகனங்களில் வந்த வீரர்கள் இடிபாடுகளில் சிக்கித் தவித்த தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
3 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்று வரும் இந்த மீட்புப் பணியில் இதுவரை 5 பேர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்கள். மேலும் இடிபாடுகளில் சிக்கி 2 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். இவர்கள் குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்துக்குள்ளான இந்த கட்டடம் ஆபத்தான நிலையில் இருப்பதாக கடந்த மார்ச் மாதம் 31-ஆம் தேதி ஏற்கனவே நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. ஏப்ரல் 14-ஆம் தேதி காவல்துறைக்கும் தகவல் கொடுக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
அரசு உதவி வழக்குரைஞர் நிலை 2 பணி... தேர்வு செய்யப்பட்ட 45 பேருக்கு பணி ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
-
சட்டம் - ஒழுங்கை உறுதிப்படுத்திய காவல்துறை: தமிழ்நாட்டில் முக்கிய குற்றங்கள் குறைந்தது: அதிகாரிகள் தகவல்!
-
வெளியானது ஐபிஎல் 2026 முதற்கட்ட அட்டவணை… El Clasico CSK vs MI போட்டிகள் இல்லையா? - முழு விவரம்!
-
“மீனவர்கள் கைதில் மெத்தனமாக இருப்பது ஏன்?” -நாடாளுமன்றத்தில் தி.மு.க MP-க்களின் அனல் பறந்த கேள்விகள்!
-
ரூ.35.45 கோடி மதிப்பில் முன்னாள் படைவீரர்கள் விடுதி, பயிற்சி மையக் கட்டடம்: அடிக்கல் நாட்டிய முதலமைச்சர்!