India
“143 பொருள்கள் மீதான GST வரியை உயர்த்த திட்டம்..?” : மக்களின் மீது மேலும் சுமையை திணிக்கும் மோடி அரசு!
பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்ட, குறிப்பிட்ட சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டியை உயர்த்தவும், விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவும் பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
பொருளாதார மந்த நிலையுடன் வரி வசூல் குறைந்திருப்பதால் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஜி.எஸ்.டி வரி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதனால்அப்பளம், சர்க்கரை, பவர்பேங்க் உள்ளிட்ட 143 பொருட்களின் மீதான வரியை 18% லிருந்து 28% உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஒழுங்காக அணுகி அதற்கு சரியான தீர்வு காணாமல் மேலும் மேலும் மக்கள் மீதே வரிச்சுமையை செலுத்துவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!
-
“நீட் தேர்வு எனும் உயிர்க் கொல்லியை ரத்து செய்ய வேண்டும்!” : தி.மு.க மாணவர் அணிச் செயலாளர் வீரமணி!
-
சூழ்ந்த மக்கள்.. செய்தி சேகரித்த பத்திரிகையாளர்.. மிரட்டிய தவெக அமைச்சரின் ஆதரவாளர்.. வைரலாகும் வீடியோ!
-
தொகுதி மறுவரையறை கூட்டம் எதற்காக? ; தவெக அரசை இயக்குவது? : அடுக்காடுக்காக கேள்விகளை எழுப்பிய கனிமொழி MP!