India
“143 பொருள்கள் மீதான GST வரியை உயர்த்த திட்டம்..?” : மக்களின் மீது மேலும் சுமையை திணிக்கும் மோடி அரசு!
பொருளாதார மந்தநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வருவாய் இழப்பை ஈடுகட்ட, குறிப்பிட்ட சில பொருட்களுக்கான ஜி.எஸ்.டியை உயர்த்தவும், விலக்களிக்கப்பட்டுள்ள பொருட்களை ஜி.எஸ்.டிக்குள் கொண்டுவரவும் பா.ஜ.க அரசு திட்டமிட்டுள்ளது
ஜி.எஸ்.டி. வரி விதிப்பின் மூலம் மத்திய அரசுக்கு கிடைக்கும் வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி வரியை மாற்றியமைப்பது குறித்து மாநில அரசுகளுடன் ஜி.எஸ்.டி கவுன்சில் ஆலோசனை மேற்கொண்டுள்ளது.
பொருளாதார மந்த நிலையுடன் வரி வசூல் குறைந்திருப்பதால் ஒன்றிய அரசுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க ஜி.எஸ்.டி வரி விகிதத்தை மாற்றியமைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதனால்அப்பளம், சர்க்கரை, பவர்பேங்க் உள்ளிட்ட 143 பொருட்களின் மீதான வரியை 18% லிருந்து 28% உயர்த்த ஜி.எஸ்.டி கவுன்சில் திட்டமிட்டுள்ளது. இதனால் பொருட்களின் விலை உயரும் அபாயம் உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார சரிவை ஒழுங்காக அணுகி அதற்கு சரியான தீர்வு காணாமல் மேலும் மேலும் மக்கள் மீதே வரிச்சுமையை செலுத்துவது எந்த விதத்தில் சரியாக இருக்கும் என அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Also Read
-
“மக்கள் தேடும் இடத்தில் முதல் ஆளாக இருப்பேன்!” : முதலமைச்சர் விஜய்க்கு கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
“ஆளும்கட்சியின் மிரட்டலுக்கெல்லாம் அஞ்சிடும் இயக்கம் அல்ல திமுக” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அதிரடி!
-
கொலை நகரான தலைநகரம் : சென்னை தியாகராயநகரில் அடுத்தடுத்து இரண்டு கொலைகள்!
-
கோவையில் அத்துமீறல்: காவல் நிலையத்தையும் விட்டுவைக்காத த.வெ.க.வினரின் விளம்பர மோகம்!
-
இதைக்கூட சரி செய்ய துப்பு இல்லாமல் எதற்கு முதலமைச்சர் நாற்காலி : முரசொலி கடும் தாக்கு!