India
11 வயது சிறுமியைக் கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த 6 சிறுவர்கள்.. ஜார்க்கண்டில் கொடூர சம்பவம்!
ஜார்கண்ட் மாநிலம், குந்தி மாவட்டத்திற்குட்பட்ட கிராமம் ஒன்றில் திருமண நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றுள்ளது. இதில் நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அப்போது ஒரு சிறுமிக்கும், சில சிறுவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அச்சிறுமி தனது தோழிகளுடன் சேர்ந்து இரவு நேரத்தில் வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இவரைப் பின்தொடர்ந்து வந்த தகராறு செய்த சிறுவர்கள் அச்சிறுமியைக் கடத்தி சென்றதாகக் கூறப்படுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உடன் வந்த தோழிகள் உடனே வீட்டிற்குச் சென்று அவரது பெற்றோரிடம் நடந்தவற்றைத் தெரிவித்துள்ளனர்.
பிறகு அவர்கள் பதறியடித்து சிறுமியைத் தேடி வந்துள்ளனர். இவர்கள் வருவதைப் பார்த்த சிறுவர்கள், சிறுமியை விட்டுவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். இது குறித்து அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த புகாரின் அடிப்படையில் போலிஸார் வழக்குப் பதிவு செய்தி விசாரணை நடத்தியதில் சிறுமியைக் கடத்திய சிறுவர்கள் அவரை பாலியல் வன்கொடுமை செய்துள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து இதில் தொடர்புடைய 6 சிறுவர்களையும் போலிர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!
-
“தேசிய சராசரியை விட 3 மடங்கு அதிக வளர்ச்சியடைந்த தமிழ்நாடு!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேருரை!