India
கிச்சடில இவ்வளவு உப்பா? மனைவி கழுத்தை நெரித்துக் கொன்ற கணவன்.. உண்மையில் நடந்தது என்ன?
மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தில் உள்ள பதக் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் நிலேஷ் காக் (46). இவரது மனைவி நிர்மலா (40).
கணவன் மனைவி இருவரும் ஒன்றாகவே வசித்து வருகிறார்கள். இருவருக்குள்ளும் அவ்வப்போது வாக்குவாதமும் சண்டையும் நடைபெற்று வருவது வழக்கம்.
இந்த நிலையில் கடந்த வெள்ளியன்று (ஏப்.,15) காலை உணவாக நிலேஷுக்கு நிர்மலா கிச்சடி செய்து கொடுத்திருக்கிறார்.
அதில் உப்பு அதிகமாக இருந்ததால் ஆத்திரமடைந்த நிலேஷ் நிர்மலாவிடம் வழக்கம் போல சண்டையிட்டிருக்கிறார். வாக்குவாதம் கைகலப்பாக முற்றியிருக்கிறது.
இதன் காரணமாக நீளமான துண்டை எடுத்து நிர்மலாவின் கழுத்தை சுற்றி நெரித்திருக்கிறார். இதனால் நிலைதடுமாறி விழுந்த நிர்மலா அப்போதே இறந்திருக்கிறார்.
இது தொடர்பாக அறிந்த போலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து நிர்மலாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் மனைவியின் கழுத்தை நெரித்து கொன்ற நிலேஷ் மீது 302 சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த மகாராஷ்டிரா போலிஸார் அவரை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“இதுதான் சரியான தருணம்!” : திமுக-விற்கான மறுசீரமைப்பு ஆலோசனைக் குழு பட்டியலை வெளியிட்டார் மு.க.ஸ்டாலின்!
-
“6 மாதம் பொறுத்திருந்தால், பறிபோன உயிர்களைத் திருப்பித்தருவாரா ரீல்ஸ் முதலமைச்சர்?” : தி.மு.க கேள்வி!
-
மறைமுகமாக போதைப் பொருள் புழக்கத்தை ஊக்குவிக்கிறாரா விஜய்? : தி.மு.க தகவல் தொழில்நுட்ப அணி கேள்வி!
-
“கொடூரமான குற்றங்களுக்கு இரக்கம் காட்டக்கூடாது” : பாலியல் வன்கொடுமை வழக்கில் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
-
9-ஆம் வகுப்பு பாடத்தில் மனுஸ்மிருதி : தமிழச்சி தங்கபாண்டியன் எம்.பி கண்டனம்!