India
“ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து.. 6 பேர் உடல் கருகி பலி” : ஆந்திராவில் நடந்த சோகம் !
ஆந்திரா மாநிலம், அக்கிரெட்டிகுளம் பகுதியில் ரசாயன தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு நேற்று இரவு வழக்கம்போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென தொழிற்சாலைக்குள் ஏற்பட்ட ரசாயன கசிவு காரணமாக பயங்கர தீ விபத்து எற்பட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைக்குள் இருந்த பணியாளர்கள் பலரும் தீயில் சிக்கியுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயில் சிக்கியிருந்தவர்களை மீட்டு வெளியே கொண்டடு வந்தனர். இருப்பினும் தீயில் கருகி 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலருக்கு தீக்காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்து குறித்து போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் வழங்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். அதேபோல் பலத்த காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.5 லட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு ரூ.2 லட்சமும் நிவாரணம் வழங்க முதல்வர் ஜெகன்மோன் ரெட்டி உத்தரவிட்டுள்ளார்.
Also Read
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!
-
“தமிழ்நாடு எனும் அமைதிப் பூங்காவில் எல்லார்க்கும் எல்லாம் கிடைக்கும்! ” : முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுரை!
-
ஒன்றிய அரசின் இந்த மசோதா கார்ப்பரேட்களிடம் கையேந்துகிற நிலையை உருவாக்கும் - செல்வப்பெருந்தகை !
-
கோவையில் ரூ.208.50 கோடி செலவில் ‘செம்மொழிப் பூங்கா’ திறப்பு : முழு விவரம் உள்ளே!
-
”இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை வாசிக்கவும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு!