India
அரசின் ட்விட்டர் கணக்குகளை குறிவைத்து தாக்கும் ஹேக்கர்கள்... 2 நாளில் 3 ட்விட்டர் பக்கங்கள் ஹேக்!
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆத்தியநாத்தின் அலுவலக ட்விட்டர் கணக்கை நேற்று மர்ம நபர்கள் ஹேக் செய்திருந்த நிலையில் இன்று இந்திய பல்கலைக்கழக மானியக்குழுவின் (UGC) அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கமும் ஹேக் செய்யப்பட்டுள்ளது.
இந்த பக்கத்தை ஹேக் செய்த உடன் அர்த்தமற்ற பகுதிவுகளை வெளியிட்டு அதை பல்வேறு நபர்களுக்கு டேக் செய்துள்ளனர். மேலும் அந்தப் பக்கத்தின் முகப்புப் படத்தை மாற்றி Azuki என்ற கார்ட்டூன் படத்தை வைத்துள்ளனர்.
இதனை அறிந்த UGC தொழில்நட்ப வல்லுநர்கள் சிறிது நேரத்திலேயே ஹேக்கர்களிடமி இருந்து பக்கத்தை மீட்டுள்ளனர். இருப்பினும் ஹேக் செய்யப்பட்டUGC பக்கத்தின் முகப்புப் படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கடந்த இரண்டு நாட்களில் தொடர்ச்சியாக அரசுக்குச் சொந்தமான ட்விட்டர் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. உத்தர பிரதேச முதல்வர் அலுவலக ட்விட்டர் கணக்கு மற்றும் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பக்கம், தற்போது UGC ட்விட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் பணிகள் தொய்வின்றி நடைபெற வேண்டும்... ரூ.2.15 கோடி வழங்கிய முதலமைச்சர் !
-
”இந்தியா வந்துள்ள மோடி, மணிப்பூர் செல்வாரா?” : பிரதமருக்கு 4 கேள்விகளை எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
-
”ஊழலில் திளைக்கும் குஜராத் மாடல் ஆட்சி” : ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு!
-
”கீழடி விவகாரத்தில் ஒன்றிய அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாக்கி உள்ளது” : அமைச்சர் தங்கம் தென்னரசு!
-
பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கவில்லை; முழு சங்கியாக மாறிவிட்டார் பழனிசாமி : முரசொலி தலையங்கம் கடும் தாக்கு!