India
சிறுவனை தும்பிக்கையால் தூக்கிச் சுற்றிய யானை.. போராடி மீட்ட தந்தை - வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
கேரளாவில் யானைக்கு உணவு கொடுக்கச் சென்ற சிறுவனை தும்பிக்கையால் யானை தூக்கிய நிலையில், சிறுவனின் தந்தை போராடி மீட்டுள்ளார்.
கேரளா மாநிலம் மலப்புரம், கீழபறம்பு பகுதியைச் சேர்ந்த நாசர் என்பவருக்கு சொந்தமான யானைக்கு உணவு கொடுக்க 4 வயதுள்ள ஒரு சிறுவனும், அச்சிறுவனின் தந்தையும் யானையின் அருகில் சென்றுள்ளனர்.
சிறுவன் உணவு கொடுக்க முயன்ற நேரத்தில் திடீரென மிரண்ட யானை அந்த ச்சிறுவனை தும்பிக்கையில் தூக்கி சுற்றி வளைத்துள்ளது. இதைப்பார்த்த சிறுவனின் தந்தை யானையுடன் போராடி தனது சிறுவனை பெரிய போராட்டத்திற்கு பின் காப்பாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வு ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது என்றாலும் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போதுதான் வெளியாகியுள்ளன.
4 வயது தனது குழந்தையை காப்பாற்ற தந்தை நடத்திய போராட்டத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
Also Read
-
“லண்டன் போய் முதலீடு ஈர்த்த லட்சணம் என்னன்னு தெரிஞ்சு போச்சு..” - விஜயை வெளுத்து வாங்கிய ஆர்.எஸ்.பாரதி!
-
ரெய்டு மற்றுமொரு திசைதிருப்பும் அரசியல் : த.வெ.க அரசுக்குத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம்!
-
3 நாள் விடுமுறை - கூடுதல் பேருந்துகளை விட வேண்டும் என்ற அறிவு கூட இல்லாத சேடிஸ்ட் த.வெ.க அரசு!
-
“த.வெ.க பொறுக்கிகளால் பெண் போலீசாருக்கே பாதுகாப்பில்லை” : தி.மு.க IT Wing கண்டனம்!
-
அமைச்சர் நிர்மல்குமார் மீது உரிமை மீறல் நடவடிக்கை எடுக்க வேண்டும் : சபாநாயகரிடம் தி.மு.க கடிதம்!