India
சிறுவனை தும்பிக்கையால் தூக்கிச் சுற்றிய யானை.. போராடி மீட்ட தந்தை - வைரலாகும் வீடியோவின் பின்னணி என்ன?
கேரளாவில் யானைக்கு உணவு கொடுக்கச் சென்ற சிறுவனை தும்பிக்கையால் யானை தூக்கிய நிலையில், சிறுவனின் தந்தை போராடி மீட்டுள்ளார்.
கேரளா மாநிலம் மலப்புரம், கீழபறம்பு பகுதியைச் சேர்ந்த நாசர் என்பவருக்கு சொந்தமான யானைக்கு உணவு கொடுக்க 4 வயதுள்ள ஒரு சிறுவனும், அச்சிறுவனின் தந்தையும் யானையின் அருகில் சென்றுள்ளனர்.
சிறுவன் உணவு கொடுக்க முயன்ற நேரத்தில் திடீரென மிரண்ட யானை அந்த ச்சிறுவனை தும்பிக்கையில் தூக்கி சுற்றி வளைத்துள்ளது. இதைப்பார்த்த சிறுவனின் தந்தை யானையுடன் போராடி தனது சிறுவனை பெரிய போராட்டத்திற்கு பின் காப்பாற்றியுள்ளார்.
இந்த நிகழ்வு ஆறு மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது என்றாலும் இதுதொடர்பான வீடியோ காட்சிகள் தற்போதுதான் வெளியாகியுள்ளன.
4 வயது தனது குழந்தையை காப்பாற்ற தந்தை நடத்திய போராட்டத்தின் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகின்றன.
Also Read
-
“எல்லாருக்கும் எல்லாம் என்ற கழக ஆட்சி தொடரும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்து!
-
“VBGRAMG சட்டம் - பாஜகவிற்கு தமிழ்நாடு பாடம் புகட்டும்” : தலைவர்கள் கண்டன உரை!
-
“சென்னை பெசன்ட் நகர் ‘உணவுத் திருவிழா’ டிசம்பர் 28 வரை நீட்டிப்பு!” : துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்!
-
ஒன்றிய அரசுக்கு எதிராக வெகுண்டெழுந்த தமிழ்நாடு : வின் அதிர எழுந்த VBGRAMG சட்டம் ஒழிக! முழக்கம்!
-
“ஒட்டுமொத்த இந்தியாவிற்கான தமிழ்நாட்டின் குரல்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!