India
மோடி ஆட்சியில் தொடரும் பொருளாதார வீழ்ச்சி: 7.36 லட்சம் கோடி வருவாய் ஈட்டிய அதானி.. அம்பானிக்கு எந்த இடம்?
கொரோனான வைரஸ் தாக்கத்தால் இந்தியாவில் கடந்த ஆண்டு கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டது. இந்த சரிவிலிருந்து இன்னும் மீள முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றால், பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இதனால் லட்சம் பேர் வேலை இழந்து வீதிக்கு வந்துள்ளனர்.
ஆனால், இதை பற்றி எல்லாம் கவலைப்படாத மோடி தலைமையிலான பா.ஜ.க அரசு ரயில்வே, விமான நிலையம், ராணுவத் தளவாடங்கள் என பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்று வருகிறது.
இந்நிலையில், மோடி அரசு இரண்டு நபர்களின் செல்வங்களை வளர்க்கவே ஆட்சியைச் செய்கிறது. இது மக்களுக்கான ஆட்சி கிடையாது. பணக்காரர்களுக்கான ஆட்சி என எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனங்கள் செய்து வந்தனர்.
இந்நிலையில் கடந்தாண்டு மே மாதம் வெளியான அறிக்கையின் படி, பிரதமர் நரேந்திர மோடியின் நெருங்கிய நண்பரான அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி, உலக அளவில் அம்பானிக்கு அடுத்தபடியாக 14-ஆவது இடத்தைப் பிடித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து தற்போது வெளியான தகவலின் படி, அதானி குழுமத்தில் உள்ள நிறுவனங்களில் பெரும்பான்மை பங்குகள் கவுதம் அதானிக்கு சொந்தம் என்பதால், அவரின் சொத்து மதிப்பு கடந்த இரண்டு நாட்களில் 15,262 கோடி ரூபாய் அளவுக்கு அதிகரித்துள்ளது.
அதானியின் மொத்த சொத்து மதிப்பு 7.36 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இந்தியா மற்றும் ஆசிய பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ள முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு தற்போது 7.45 லட்சம் கோடி ரூபாயாக உள்ள நிலையில், அதானி, முகேஷ் அம்பானியை நெருங்கியுள்ளார்.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!