India
புகைப்பிடித்த சிறுவன் அடித்துக் கொலை.. உடலை ரோட்டில் வீசிய கொடூரம் : டெல்லியில் நடந்த ‘பகீர்’ சம்பவம் !
டெல்லியில் உள்ள மங்கோல்புரி பகுதியைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் வீட்டின் அருகே புகைப்பிடித்துக் கொண்டிருந்துள்ளார். அப்போது அங்கிருந்த மற்றொரு சிறுவன் அங்கு புகைப்பிடிக்கக் கூடாது என கூறியுள்ளார்.
இதனால் இரண்டு சிறுவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பின்னர் இருவரும் ஒருவரை மாறி ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கொண்டுள்ளனர். அதில் ஆவேசத்தின் உச்சத்திற்குச் சென்ற சிறுவன், புகைபிடித்துக் கொண்டிருந்த சிறுவனின் கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளான்.
பின்னர், யாருக்கும் தெரியாமல் சிறுவனின் உடலை ஒரு பையில் போட்டு சாலையோரம் தூக்கி வீசியுள்ளார். இது குறித்து அறிந்த போலிஸார் சிறுவன் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதையடுத்து போலிஸார் கொலை செய்த சிறுவனை கைது செய்து சிறையில் அடைத்தனர். புகைப்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறில் சிறுவன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!