India
நண்பனைக் கொன்று 30 துண்டுகளாக வெட்டிப் புதைத்த சைக்கோ - அதிர்ச்சி சம்பவத்தின் பின்னணி என்ன?
உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் இர்ஃபான். இவர் சுங்கச்சாவடி அருகே ஃபாஸ்ட்டேக் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது நண்பர் ரகீப் என்பவரும் இர்ஃபானின் கடை அருகே உணவு கடை நடத்தி வருகிறார்.
மேலும், இர்ஃபான் தொழிலிலும் ரகீப் முதலீடு செய்துள்ளார். இவருவரும் சேர்ந்து தங்களின் கடையைப் பார்த்துக்கொள்ள மொஹம்மது அசிப் என்பவரை பணியில் வைத்துள்ளனர்.
இந்நிலையில் இர்ஃபான் மற்றும் ரகீப் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் கொடுத்த பணத்தை ரகீப் திரும்பக் கேட்டுள்ளார். மேலும் பணம் தரவில்லை என்றால் கடையைத் தானே எடுத்துக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.
அதேபோல் இர்ஃபானை கொல்லவும் திட்டமிட்டுள்ளார். இதையடுத்து தனது நண்பர்களுடன் சேர்ந்து இர்ஃபானை கொலை செய்து அவரது உடலை 30 துண்டாக வெட்டி புதைத்துள்ளனர்.
பின்னர் தனது மகனை காணவில்லை என இர்ஃபானின் தந்தை மார்ச் 18ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் போலிஸார் நடத்திய விசாரணையில் இந்த உண்மை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதையடுத்து போலிஸார் ரகீப் மற்றும் அசிப்பை கைது செய்துள்ளனர்.
Also Read
-
மாநிலங்களவை தேர்தல் - தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள தே.மு.தி.க-விற்கு ஒரு MP சீட் ஒதுக்கீடு!
-
மகளிர் வேலைவாய்ப்பை ஊக்குவிக்க 23 மாவட்டங்களில் “திறனகம்” : 5 முக்கிய அம்சங்கள் என்ன?
-
ஒன்றிய - மாநில உறவு : தமிழ்நாட்டின் குரலுக்கு ஆதரவு தந்த CM சித்தராமையா - நன்றி சொன்ன CM MK Stalin!
-
தென் இந்தியாவிலேயே முதன் முறை... சென்னையில் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்பு உயர்திறன் மையம்!
-
இளைஞர்களுக்கு வெளிநாட்டில் வேலைவாய்ப்பு : துணை முதலமைச்சர் உதயநிதி முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம்!