India
மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி கொல்ல முயற்சி; தப்பியோடிய கணவனுக்கு காப்பு மாட்டிய புதுவை போலிஸ்!
புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கணேசனின் மனைவி அழகுமீனா. அண்ணா சாலையில் உள்ள பியூட்டி பார்லரில் அழகுமீனா, வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பியூட்டி பார்லருக்கு வந்த கணேசன், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணேசன், தன்னோடு எடுத்து வைத்திருந்த மண்ணெண்ணையை அழகுமீனா மீது ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதில் முகம், நெஞ்சு மற்றும் தோள் பகுதியில் பலத்த தீ காயம் ஏற்பட்டு மீனா அலறினார். இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பியோடினார். பின்பு மற்ற ஊழியர்கள் அழகுமீனாவை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, தப்பியோடிய கணேசனை கைது செய்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தப்படும்!” : முதலமைச்சர் அறிவிப்பு!
-
பெரம்பூரில் ரூ.39 கோடியில் 310 திறந்தவெளி மின்மாற்றிகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்! : முழு விவரம் உள்ளே!
-
கொளத்தூர் மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதல்வர்! - 6 நியாய விலைக்கடைகள், மறுவாழ்வு மையம் தொடக்கம்!
-
தமிழ்த்தாயின் தலைமகன் : பேரறிஞர் அண்ணா நினைவிடத்தில் மரியாதை செலுத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்க வேண்டும் : காப்பீட்டு நிறுவனங்களுக்கு அமைச்சர் MRK உத்தரவு!