India
மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி கொல்ல முயற்சி; தப்பியோடிய கணவனுக்கு காப்பு மாட்டிய புதுவை போலிஸ்!
புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கணேசனின் மனைவி அழகுமீனா. அண்ணா சாலையில் உள்ள பியூட்டி பார்லரில் அழகுமீனா, வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பியூட்டி பார்லருக்கு வந்த கணேசன், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணேசன், தன்னோடு எடுத்து வைத்திருந்த மண்ணெண்ணையை அழகுமீனா மீது ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதில் முகம், நெஞ்சு மற்றும் தோள் பகுதியில் பலத்த தீ காயம் ஏற்பட்டு மீனா அலறினார். இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பியோடினார். பின்பு மற்ற ஊழியர்கள் அழகுமீனாவை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, தப்பியோடிய கணேசனை கைது செய்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
பட்டா சேவைகளை கண்காணிக்க தரக்கட்டுப்பாடு மையம் : நிலஅளவை அலுவலர்களுக்கு நவீன வசதியுடன் புதிய வாகனங்கள்!
-
தவற விட்ட 28 சவரன் தங்க நகை : அரசு ஓட்டுநரின் நெகிழ்ச்சி செயல் - பொதுமக்கள் பாராட்டு!
-
‘‘அ.தி.மு.க.வை அடகு வைத்துவிட்டு வக்கணை பேசலாமா?’’ : எடப்பாடி பழனிசாமிக்கு கி.வீரமணி கேள்வி!
-
ரூ.43.20 கோடியில் அறநிலையத்துறை கட்டடங்கள் திறப்பு - 83 பேருக்கு பணி நியமன ஆணை! : முழு விவரம் உள்ளே!
-
கரூர் விவகாரம் “நாங்க வழக்குப் போடல” - நீதிமன்றத்தை ஏமாற்றிய தவெக: பாதிக்கப்பட்டவர்கள் புகாரால் ட்விஸ்ட்