India
மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி கொல்ல முயற்சி; தப்பியோடிய கணவனுக்கு காப்பு மாட்டிய புதுவை போலிஸ்!
புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கணேசனின் மனைவி அழகுமீனா. அண்ணா சாலையில் உள்ள பியூட்டி பார்லரில் அழகுமீனா, வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பியூட்டி பார்லருக்கு வந்த கணேசன், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணேசன், தன்னோடு எடுத்து வைத்திருந்த மண்ணெண்ணையை அழகுமீனா மீது ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதில் முகம், நெஞ்சு மற்றும் தோள் பகுதியில் பலத்த தீ காயம் ஏற்பட்டு மீனா அலறினார். இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பியோடினார். பின்பு மற்ற ஊழியர்கள் அழகுமீனாவை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, தப்பியோடிய கணேசனை கைது செய்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“அமைதியும் எளிமையுமிக்கவர்... திரைப்பாசம் குடும்ப பாசமானது..” - AVM சரவணன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல்!
-
சென்னை மாநகர செரீப்.. எழுத்தாளர்... தயாரிப்பாளர்... பன்முக கலைஞர் AVM சரவணன் காலமானார்!
-
SIR பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள இதுவே நோக்கம்... புட்டுப்புட்டு வைத்த முரசொலி தலையங்கம்!
-
‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கான நிதியை 34% குறைத்தது ஏன்?: ராஜாத்தி சல்மா எம்.பி கேள்வி!
-
“ஆசிரியர்கள் பற்றாக்குறையைத் தீர்க்க ஒன்றிய அரசு எடுத்த நடவடிக்கை என்ன?” : திருச்சி சிவா எம்.பி கேள்வி!