India
மனைவி மீது மண்ணெண்ணெய்யை ஊற்றி கொல்ல முயற்சி; தப்பியோடிய கணவனுக்கு காப்பு மாட்டிய புதுவை போலிஸ்!
புதுச்சேரி அடுத்த கொம்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் கணேசன். இவர் பெயிண்டராக பணியாற்றி வருகிறார். கணேசனின் மனைவி அழகுமீனா. அண்ணா சாலையில் உள்ள பியூட்டி பார்லரில் அழகுமீனா, வேலை பார்த்து வருகிறார்.
இந்நிலையில் பியூட்டி பார்லருக்கு வந்த கணேசன், தனது மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் கணேசன், தன்னோடு எடுத்து வைத்திருந்த மண்ணெண்ணையை அழகுமீனா மீது ஊற்றி கொளுத்தியுள்ளார்.
இதில் முகம், நெஞ்சு மற்றும் தோள் பகுதியில் பலத்த தீ காயம் ஏற்பட்டு மீனா அலறினார். இதையடுத்து கணேசன் அங்கிருந்து தப்பியோடினார். பின்பு மற்ற ஊழியர்கள் அழகுமீனாவை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனிடையே அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி, தப்பியோடிய கணேசனை கைது செய்து போலிசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
“நீதித்துறையின் மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகிறது” -முன்னாள் நீதிபதி பிரபா ஸ்ரீதேவன் வருத்தம்!
-
5வது மாடியில் இருந்து வீசப்பட்ட பேச்சிளம் குழந்தை... தாயை அதிரடியாக கைது செய்த போலீஸ் -விசாரணையில் பகீர்!
-
காணாமல் போன மோடி : காணவில்லை என சுவரொட்டி அடித்த மணிப்பூர் மக்கள்!
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !