India
‘இனி உன் அப்பா வீட்டுக்கு வரமாட்டாரு..’ : காதலியின் தந்தையை பார்ட்டிக்கு அழைத்து கொலை செய்த இளைஞர் !
மும்பை உல்லாஸ் பகுதியைச் சேர்ந்தவர் பப்பு குமார் ஷா (26). இவர் அதே பகுதியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார். இந்நிலையில், பப்பு அந்தப் பெண்ணை திருமணம் செய்துகொள்ள காதலியின் தந்தை கமல்ஜீத் என்பவரை சந்தித்து பெண் கேட்டுள்ளார். ஆனால், கமல்ஜீத் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து வீட்டை விட்டு வெளியேறிய பப்பு சில நாட்களுக்கு பிறகு மீண்டும், கமல்ஜீத்தை பார்ட்டி ஒன்றுக்கு அழைத்துள்ளார். அதன்படி பப்பு ஏற்பாடு செய்திருந்த அந்த சிறப்பு பார்ட்டிக்கு கமல்ஜீத் கலந்துக்கொள்ள வந்துள்ளார்.
அப்போது, அவருக்கு குடிக்க மதுபானம் கொடுத்துள்ளார். அடுத்த சிறுது நேரத்திலேயே அங்கிருந்தவர் பப்புவின் நண்பர்கள் குடிபோதையில் மயங்கிய நிலையில் இருந்தபோது, போதையில் இருந்த காதலியின் தந்தையை தனியாக அழைத்துச் சென்று, ‘உன்னோட மகளை திருமணம் செய்துகொள்ள தடையா நீதான் இருக்க.. இனி நீ வேண்டாம்’ என்று கூறி, மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து, கமல்ஜீத்தின் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளார் பப்பு.
பின்னர் காதலிக்கு போன் செய்த பப்பு, 'இனி உன் அப்பா வீட்டுக்கு வரமாட்டாரு.. அவரை நான் கொன்றுவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த காதலி, உடனே அருகில் உள்ள காவல்நிலையத்திற்கு இதுகுறித்து தொடர்புகொண்டு நடந்தவற்றைக் கூறியுள்ளார்.
பின்னர் போலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பப்புவை கைது செய்து, கமல்ஜீத் உடலை மீட்டு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“த.வெ.க அரசு காப்பி பேஸ்ட் அரசு ; ஆளுநர் உரையை வன்மையாகக் கண்டிக்கிறோம்” : உதயநிதி ஸ்டாலின் முழு பேட்டி!
-
திருவாரூரில் இளம் பெண்ணிடம் ஈவ்டீசிங் : த.வெ.க ஒன்றிய செயலாளர் உட்பட இருவர் கைது!
-
வீடு வாடகைக்கு கேட்பது போல் நடித்து 5 சவரன் நகை பறிப்பு: எடப்பாடியில் பரபரப்பு!
-
“கூச்ச நாச்சமற்று சட்டமன்ற மரபுகளை அடமானம் வைக்கும் த.வெ.க அரசு” : தி.மு.க IT WING கண்டனம்!
-
“ஒரு மாதத்தில் 175 பாலியல் வன்கொடுமைகள், 56 கொலைகள் நடந்தும் வாய் திறக்காத CM!” : உதயநிதி குற்றச்சாட்டு!