India
கைது செய்யப்பட்ட Paytm நிறுவனர்.. உடனே ஜாமினில் விடுவிப்பு: காரணம் என்ன?
Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மா கடந்த பிப்ரவரி 22ம் தேதி ஜாகுவார் லேண்ட்ரோவர் காரை ஓட்டிச் சென்றபோது மதர்ஸ் இன்டர்நேஷ்னல் பள்ளிக்கு வெளியே நின்றிருந்த காவல்துறை ஆணையரின் வாகனத்தின் மீது மோதியுள்ளார்.
பின்னர் அவர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். அப்போது போலிஸாரின் வாகனத்திலிருந்து ஓட்டுநர் தீபக் குமார் இது குறித்து காவல்துறை ஆணையருக்குத் தகவல் தொடுத்துள்ளார்.
இதையடுத்து விபத்து ஏற்படுத்திய வாகன எண்ணை கொண்டு விசாரணை செய்தபோது அந்த வாகனம் Paytm நிறுவனர் விஜய் சேகர் ஷர்மாவுக்கு சொந்தமானது என தெரியவந்தது.
பிறகு கவனக்குறைவாகக் காரை ஓட்டிய வழக்கில் அவரை போலிஸார் கைது செய்து ஜாமினில் விடுவித்தனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்புதான் வங்கிகள் ஒழுங்குமுறை சட்டத்தின்கீழ், பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கிக்கு புதிய வாடிக்கையாளர்களைச் சேர்க்க ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!