India
மங்கி குல்லா அணிந்து செயின், பாத்திரம், துணிகள் திருட்டு: அதிகாலையில் கைவரிசையை காட்டிய திருடனுக்கு வலை!
புதுச்சேரி லாஸ்பேட்டை சரவணன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குப்புசாமி - சின்னப்பொண்ணு. வயதான தம்பதியினர். இவர்கள் இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து தூங்குவது வழக்கம்.
இந்நிலையில் இரவு சின்னபொன்னு ஜன்னல் அருகே தனது தங்க செயினை கழற்றி தூங்கிய நிலையில், காலை எழுந்து பார்த்தபோது செயின் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் விடியற்காலை 3 மணியளவில் மங்கி குல்லா அணிந்து கொண்டு, சின்னபொண்ணு வீட்டிற்குள் சென்று வருவதும், அதே தெருவில் 5க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்துவிட்டு வெளியே வருவதும் பதிவாகி இருந்து.
இதனை தொடர்ந்து போலிஸார் விசாரணை செய்ததில் அந்த மர்ம நபர் அப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளில் பாத்திரங்கள் மற்றும் துணிகள் போன்றவற்றை திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் சிசிடிவி கேமிராவில் பதிவான மர்ம நபர் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல திருடன்போல் உள்ளதால், போலிஸார் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!