India
மங்கி குல்லா அணிந்து செயின், பாத்திரம், துணிகள் திருட்டு: அதிகாலையில் கைவரிசையை காட்டிய திருடனுக்கு வலை!
புதுச்சேரி லாஸ்பேட்டை சரவணன் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் குப்புசாமி - சின்னப்பொண்ணு. வயதான தம்பதியினர். இவர்கள் இரவு நேரங்களில் வீட்டின் ஜன்னல்களை திறந்து வைத்து தூங்குவது வழக்கம்.
இந்நிலையில் இரவு சின்னபொன்னு ஜன்னல் அருகே தனது தங்க செயினை கழற்றி தூங்கிய நிலையில், காலை எழுந்து பார்த்தபோது செயின் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
இது குறித்து அவர் லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலிஸார் சம்பவ இடத்திற்கு வந்து அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
அப்போது மர்ம நபர் ஒருவர் விடியற்காலை 3 மணியளவில் மங்கி குல்லா அணிந்து கொண்டு, சின்னபொண்ணு வீட்டிற்குள் சென்று வருவதும், அதே தெருவில் 5க்கும் மேற்பட்ட வீடுகளில் புகுந்துவிட்டு வெளியே வருவதும் பதிவாகி இருந்து.
இதனை தொடர்ந்து போலிஸார் விசாரணை செய்ததில் அந்த மர்ம நபர் அப்பகுதியில் உள்ள 5க்கும் மேற்பட்ட வீடுகளில் பாத்திரங்கள் மற்றும் துணிகள் போன்றவற்றை திருடி இருப்பது தெரிய வந்துள்ளது.
மேலும் சிசிடிவி கேமிராவில் பதிவான மர்ம நபர் முத்தியால்பேட்டை பகுதியை சேர்ந்த பிரபல திருடன்போல் உள்ளதால், போலிஸார் சிசிடிவி காட்சிகளை வெளியிட்டு தலைமறைவாக உள்ள குற்றவாளியை தேடி வருகின்றனர்.
Also Read
-
‘பிரான்ஸ் கேப்டன் எம்பாப்பே மீது இனவெறி தாக்குதல்.. பராகுவேவின் இழி மனநிலையா? குவியும் கண்டனங்கள்’
-
‘மிரட்டும் வயநாடு மண்சரிவு.. உயரும் பலி எண்ணிக்கை.. அடுத்த 24 மணி நேரம்..’ - வானிலை மையம் எச்சரிக்கை!
-
20 ஆண்டுகால கனவு நொறுங்கியது... கண்ணீருடன் முடிந்த உலகக் கோப்பை; ரொனால்டோ என்ற உணர்வின் கதை!
-
“அமைச்சர் கீர்த்தனாவின் ரீல்ஸ் மோகம்.. பள்ளிக்குழந்தைகளுக்கு அவமானம்” : கழக மகளிர் அணி கண்டனம்!
-
“வாக்குறுதியை நிறைவேற்றாத தவெக.. விவசாயிகளை ஏமாற்றினால்.. நீடிக்க முடியாது” : திமுக விவசாய அணி கண்டனம்!