India
அப்பாவை கொன்று விடுவேன் என மிரட்டி வன்கொடுமை செய்த காமுகன்: சிறுமியின் வாக்குமூலத்தால் நீதிபதி அதிர்ச்சி!
புதுச்சேரி திருபுவனை பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை கடந்த 2018 ஆம் ஆண்டு அதேப்பகுதியை சேர்ந்த செப்டிக் டேங்க் தூய்மை செய்யும் தொழிலாளி மணிகண்டன் (30) என்பவர் கத்தியைக் காட்டி கடத்திச் சென்றுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் திருபுவனை காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், மூன்று நாட்களுக்கு பின்னர், சிறுமியை மீட்டு அவரை கடத்தி சென்ற மணிகண்டனை கைது செய்து விசாரணை நடத்தியதில், அவர் சிறுமியை சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட இடங்களுக்கு அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து மணிகண்டன் மீது போக்ஸோ பிரிவின் கீழ் வழக்கு பதிவுசெய்து போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
இந்த வழக்கு கடந்த 3.5 ஆண்டுகளாக புதுச்சேரி நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இன்று இறுதி வாதங்கள் நடைபெற்றது. அப்போது சிறுமியின் தந்தையைக் கொலை செய்து விடுவேன் என மணிகண்டன் கூறி, சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி வாக்குமூலம் அளித்ததை அடுத்து தலைமை நீதிபதி செல்வநாதன் இவ்வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட மணிகண்டனுக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாநில அரசு ரூபாய் 4 லட்சம் நிவாரண உதவி வழங்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கினார்.
Also Read
-
பிரசாரத்துக்கு சென்ற பாஜக வேட்பாளருக்கு எதிர்ப்பு: சம்பவ இடத்திலேயே விவசாயி பரிதாப பலி -குவியும் கண்டனம்!
-
“பெண்கள் என்றால் எதை வேண்டுமானாலும் பேசலாமா ?” - சவுக்கு மீடியா சங்கருக்கு மகளிர் காங்கிரஸ் கண்டனம் !
-
பாலியல் வழக்கு : தொடர்ந்து எழும் புகார்... கர்நாடக முன்னாள் அமைச்சர் HD ரேவண்ணா அதிரடி கைது !
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !