India
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை.. விசாரித்த பெண் காவலர் மீதும் தாக்குதல் நடத்தி அடாவடி!
மும்பையைச் சேர்ந்தவர் காவ்யா தாப்பர். நடிகையான இவர் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மார்கெட்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு கார் ஓட்டிச்சென்றபோது, மாரியாட் ஓட்டல் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியுள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மது போதையில் இருந்ததால் நடிகை காவ்யா தாப்பர் போலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அங்கிருந்த பெண் போலிஸார் ஒருவரின் சட்டையைப் பிடித்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி நடிகையை காவ்யா தாப்பரை காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
Also Read
-
தூத்துக்குடியில் ரூ.13,000 கோடியில் மிக உய்ய அனல் மின் நிலையம்: முதலமைச்சர் தொடங்கி வைத்தார்!
-
“இருந்து போராட வேண்டும்; அதன் பயனை நாம் இருந்து காண வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவு!
-
தமிழ்நாடுக்கு திட்டங்களும் இல்லை! சிலிண்டரும் இல்லை! - தி.மு.க கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!
-
ஜல் ஜீவன் மிஷன் திட்டத்திற்கான நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக: பிரதமருக்கு முதலமைச்சர் கடிதம்!
-
திராவிட மாடல் ஆட்சியில் 25 இலட்சம் பேருக்கு பட்டா! : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்!