India
குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நடிகை.. விசாரித்த பெண் காவலர் மீதும் தாக்குதல் நடத்தி அடாவடி!
மும்பையைச் சேர்ந்தவர் காவ்யா தாப்பர். நடிகையான இவர் தமிழ், இந்தி, தெலுங்கு உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மார்கெட்ராஜா எம்.பி.பி.எஸ் படத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் நேற்று இரவு கார் ஓட்டிச்சென்றபோது, மாரியாட் ஓட்டல் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த மற்றொரு கார் மீது மோதியுள்ளார்.
இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் அங்கு வந்த போலிஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். அப்போது மது போதையில் இருந்ததால் நடிகை காவ்யா தாப்பர் போலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
மேலும் அங்கிருந்த பெண் போலிஸார் ஒருவரின் சட்டையைப் பிடித்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். இதையடுத்து போலிஸார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் நீதிபதி நடிகையை காவ்யா தாப்பரை காவலில் வைக்க உத்தரவிட்டதை அடுத்து போலிஸார் அவரை சிறையில் அடைத்தனர்.
Also Read
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!