India
”நாட்டை காக்க வேண்டுமானால் முதலில் உ.பியைதான் காப்பாற்ற வேண்டும்” - மே.வ., முதலமைச்சர் மம்தா பளீர்!
மேற்கு வங்காள மாநில முதல் அமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி நேற்று முன்தினம் ஒரு செய்தி சேனலுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது, மதச்சார்பின்மையில் நம்பிக்கை கொண்ட அனைவரும் ஒரே குடையின் கீழ் வருவது அவர்களது கடமை. அதற்காக கை கோர்க்க வருமாறு காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆகியவற்றுக்கு அழைப்பு விடுத்தேன்.
வெறுப்பு, அராஜகம் ஆகியவற்றில் இருந்து நாட்டை விடுவிக்க இதுவே நேரம். அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு சென்றுக்கொண்டிருக்கிறது. தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், தெலுங்கானா முதல்-அமைச்சர் சந்திரசேகர ராவ் ஆகியோருடன் பேசினேன்.
நாட்டின் கூட்டாட்சி முறையை அழிக்கப்படாமல் பாதுகாக்க நாங்கள் இணைந்து முயன்று வருகிறோம். உத்தரப் பிரதேசத்தில் பெண்கள் எரித்து கொல்லப்படுகின்றனர். விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்படுகின்றனர். அம்மாநில முதல்-அமைச்சர் ‘யோகி’ அல்ல. உலக விஷயங்களில் பற்றுள்ள ‘போகி’.
உத்தரப் பிரதேசத்தில் தேச நலனுக்காகத்தான் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிடவில்லை. ஏனென்றால், சமாஜ்வாடி கட்சி பலவீனமடைய நாங்கள் விரும்பவில்லை. முதல்கட்ட தேர்தல் நடந்த 57 தொகுதிகளில், சமாஜ்வாடி கட்சி 37 தொகுதிகளை கைப்பற்றும் என்று எதிர்பார்க்கிறேன்.
அடுத்த மாதம் 3-ந்தேதி, மீண்டும் பிரச்சாரம் செய்ய உத்தரப்பிரதேசம் செல்கிறேன். நாட்டை காப்பாற்ற வேண்டுமானால், முதலில் உத்தரப் பிரதேசத்தை காப்பாற்ற வேண்டும். கோவா சட்டசபை தேர்தலில் எங்கள் கட்சி அமோக வெற்றி பெறும்.” இவ்வாறு அவர் கூறினார்.
Also Read
-
பள்ளி மாணவர்களுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்... தொடங்கி வைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் !
-
“ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு அநீதி இழைப்பது ஏன்?” : மக்களவையில் தி.மு.க எம்.பி கலாநிதி வீராசாமி கேள்வி!
-
இந்திய வரலாற்றில் முதல்முறை... தலைமை தேர்தல் ஆணையர் மீது இம்பீச்மென்ட் தீர்மான நோட்டீஸ் ?
-
"உக்ரைன் அதிபர் நினைத்தால் போரை நிறுத்தலாம்" - டிரம்ப் கருத்தால் கலக்கத்தில் ஐரோப்பியன் நாடுகள் !
-
“பிரதமர் பெயரிலான திட்டங்களுக்கும் அதிக நிதியளிக்கும் தமிழ்நாடு அரசு!” : கனிமொழி எம்.பி கண்டனம்!