India
மீண்டும் ஓர் நிர்பயா: நேர்காணலுக்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்; ராஜஸ்தானில் பகீர் சம்பவம்!
டெல்லியில் இருந்து ராஜஸ்தானுக்கு வேலையில் சேர்வதற்கான நேர்காணலில் பங்கேற்பதற்காக ரயிலில் சிரு பகுதிக்கு கடந்த வெள்ளியன்று (பிப்.,11) சென்றிருக்கிறார் 25 வயதுடைய இளம்பெண்.
அப்போது நேர்காணலுக்கு செல்வதற்காக ரயில் நிலைய வாயிலில் காத்திருந்த போது அப்பெண்ணிடம் வந்த நால்வர், தாங்கள் வழி காட்டுவதாகச் சொல்லி அருகாமையில் இருந்த ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.
அங்கு அப்பெண்ணை நால்வரும் சேர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியதோடு அப்பெண்ணின் கை, கால்களை கட்டி வைத்து முதல் மாடியில் இருந்து ஹோட்டலுக்கு வெளியே வீசியிருக்கிறார்கள். இதில் பலத்த காயமடைந்திருக்கிறார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலிஸார் அப்பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விசாரணையை முடுக்கிவிட்டிருக்கிறார்கள்.
அதனையடுத்து, இளம்பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து தூக்கி வீசியதாக விக்ரம் சிங், தேவேந்திர சிங், பவானி சிங், சுனில் ராஜ்புத் என நால்வரை கைது செய்திருப்பதாக டி.எஸ்.பி. மம்தா சரஸ்வத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!