India
"பெண்களின் உடைதான் ஆண்களை தவறு செய்ய தூண்டுகிறது": கர்நாடக பா.ஜ.க MLA பேச்சால் சர்ச்சை!
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வரும் இஸ்லாமிய மாணவிகளுக்கு எதிராக காவித்துண்டு கும்பல் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறது. இதனால் மாநிலம் முழுவதும் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடை அணிவது அவர்களின் தனிப்படை உரிமை என அரசியல் கட்சித் தலைவர்கள் உட்பட பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கூட, "ஹிஜாப், ஜீன்ஸ், கூன்ஹட், பிகினி என எந்த உடையாக இருந்தாலும் அவற்றில் எதை அணிய வேண்டும் என்பது பெண்ணின் உரிமை" என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் பெண்கள் அணியும் உடைகளால்தான் பாலியல் வன்கொடுமைகள் நடக்கிறது என பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சார்யா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து ரேணுகாச்சார்யா, "கல்லூரியில் படிக்கும் போது பெண்கள் தங்களின் உடலை முழுவதும் மறைக்கும் படியான உடைகளைத்தான் உடுத்த வேண்டும். பெண்கள் அணியும் உடைதான் ஆண்களின் உணர்ச்சியைத் தூண்டி பாலியல் வன்கொடுமை அதிகரிப்பதற்குக் காரணமாக இருக்கிறது" என தெரிவித்துள்ளார். கர்நாடகா பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் ரேணுகாச்சார்யாவின் இந்த பேச்சுக்குப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!