India
"நான் கவலைப்படவில்லை - ஹிஜாப் அணிவேன்.. ".. காவித்துண்டு கும்பலுக்கு இஸ்லாமிய மாணவி பதிலடி!
கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து கல்லூரிக்கு வந்த மாணவி ஒருவரை அங்கிருந்த காவித்துண்டு அணிந்திருந்த சில மாணவர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஜெய் ஸ்ரீராம் கோஷமிட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் அந்த மாணவி நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன் என தெரிவித்துள்ளார். இது குறித்து அந்த மாணவி செய்தி நிறுவனம் ஒன்றிற்குப் பேட்டி அளித்துள்ளார்.
மாணவியின் அந்த பேட்டியில், நான் கவலைப்படவில்லை. நான் கல்லூரிக்குள் நுழைந்தபோது நான் பர்தா அணிந்திருந்ததால் அவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. நான் எனது அசைன்மென்ட்டை ஒப்படைக்கவே கல்லூரிக்கு வந்தேன்.
அப்போது, அவர்கள் ஜெய் ஸ்ரீ ராம் என்று கத்த ஆரம்பித்தார்கள். அதனால் நான் அல்லா ஹு அக்பர் என்று கோஷமிட்டேன். பின்னர் கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்கள் என்னை ஆதரித்து பாதுகாத்து கூட்டின் சென்றனர்.
காவித்துண்டு அணிந்திருந்த அந்த குழுவில் உள்ள 10 % பேர் எங்கள் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள். ஆனால் மீதிப்பேர் வெளியாட்கள். நான் தொடர்ந்து நான் தொடர்ந்து ஹிஜாப் அணிவேன். இதற்கான போராட்டம் தொடரும். ஆடைக்காக அவர்கள் கல்வியை அழிக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
வெளியான வாக்காளர் இறுதிப்பட்டியல்... உங்கள் பெயர் உள்ளதா? - முழு விவரம் தெரிந்து கொள்ளுங்கள்!
-
தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான தோல்வி: இந்திய அணியில் மாற்றம் நிகழுமா? அரையிறுதிக்கு செல்லுமா இந்தியா?
-
“உங்கள் தூக்கத்தை கெடுத்த surgical strike” - பழனிசாமிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலடி!
-
முதல் நாளே 120 தொகுதிகள்... வீடு வீடாக பரப்புரை... களத்தில் இறங்கியது ஸ்டாலினின் மகளிர் படை!
-
“மாணவர் நலனில் அக்கறை இருப்பதுபோல், நீலிக்கண்ணீர் வடிக்கும் அன்புமணி” : அமைச்சர் கோவி.செழியன் பதிலடி!