India
TV பார்க்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ். வாலிபரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு உறவுக்கார சிறுமி ஒருவர் ஆதர்ஷ் வீட்டிற்கு டிவி பார்க்க வந்துள்ளார்.
அப்போது வீட்டில் ஆதர்ஷ் மட்டுமே தனியாக இருந்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அவர் சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீட்டில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
பின்னர் நடந்த சம்பவத்தைச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகார் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து ஆதர்ஷை கைது செய்தனர். இந்த வழக்கு ஆற்றங்கல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்தது வந்த நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து ஆதர்சுக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் வழங்க தீர்ப்பளித்துள்ளார்
Also Read
-
"அதிமுகவின் தலைமை அலுவலகம் டெல்லியில் அமித் ஷா வீட்டில் இருக்கிறது" - துணை முதலமைச்சர் உதயநிதி விமர்சனம்!
-
அழகுபடுத்தப்படும் சென்னையின் முக்கிய ரயில் பாதைகள் : ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது மெட்ரோ நிர்வாகம் !
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!