India
TV பார்க்க வந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை.. குற்றவாளிக்கு நீதிமன்றம் வழங்கிய தண்டனை என்ன?
கேரள மாநிலம் திருவனந்தபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஆதர்ஷ். வாலிபரான இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு உறவுக்கார சிறுமி ஒருவர் ஆதர்ஷ் வீட்டிற்கு டிவி பார்க்க வந்துள்ளார்.
அப்போது வீட்டில் ஆதர்ஷ் மட்டுமே தனியாக இருந்துள்ளார். இதைப் பயன்படுத்திக் கொண்ட அவர் சிறுமியை மிரட்டி வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை வீட்டில் சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார்.
பின்னர் நடந்த சம்பவத்தைச் சிறுமி தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்தனர். இந்த புகார் பேரில் போலிஸார் வழக்கு பதிவு செய்து ஆதர்ஷை கைது செய்தனர். இந்த வழக்கு ஆற்றங்கல் விரைவு நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
இந்த வழக்கை விசாரித்தது வந்த நீதிபதி, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது உறுதியானதை அடுத்து ஆதர்சுக்கு 30 ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதம் வழங்க தீர்ப்பளித்துள்ளார்
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!