India
"பணத்த எடு இல்ல சுட்டுடுவேன்".. துப்பாக்கி முனையில் நடந்த கொள்ளை சம்பவம்: மும்பையில் அதிர்ச்சி!
மும்பையில் உள்ள மவுளண்ட் பகுதியில் நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் நேற்று முகக்கவசம் அணிந்த கும்பல் ஒன்று துப்பாக்கியுடன் புகுந்தது. இதைப்பார்த்து நிதி நிறுவன ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் அந்த கும்பல், 'அங்கு இருக்கும் பணத்தை எடுத்துக் கொடுங்க, இல்லை என்றால் துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்து விடுவேன்' என ஊழியர்களை மிரட்டியுள்ளனர்.
இதனால், ஊழியர்கள் அலுவலகத்தில் இருந்த ரூ. 77 லட்சத்தை அந்த கும்பலிடம் கொடுத்துள்ளனர். இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்றது. இது குறித்து போலிஸாருக்கு புகார் கொடுக்கப்பட்டது.
பின்னர் அங்கு வந்த போலிஸார் நிதி நிறுவனத்தில் இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்தனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளைச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் அதிகமாக கூடும் இடத்தில், அதுவும் பட்டப்பகலில் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!