India
பா.ஜ.கவிலிருந்து வெளியேறும் முக்கிய புள்ளிகள் : மே.வ நிர்வாகிகளால் மண்டை காயும் மோடி-அமித்ஷா!
மேற்கு வங்கத்தில் பா.ஜ.கவின் வாட்ஸ்அப் குழுவிலிருந்து முக்கியத் தலைவர்கள் வெளியேறியுள்ளதாகவும், அடுத்தகட்ட ஆலோசனைக்காக ரகசியக் கூட்டம் நடத்தவுள்ளதாகவும் பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.
பா.ஜ.க இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாநிலங்களிலும் அக்கட்சிக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பலை நிலவுகிறது.
அந்தவகையில், மேற்கு வங்க சட்டப்பேரவைத் தேர்தல் தோல்விக்குப் பின் பா.ஜ.கவின் வாட்ஸ் அப் குழுவிலிருந்து பா.ஜ.க தலைவர்கள் பலரும் வெளியேறி வருகின்றனர். பா.ஜ.க எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 30 பேர் அடுத்தகட்ட நடவடிக்கைக்காக ரகசியமாகக் கூடி ஆலோசிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேற்கு வங்கத்தில் கடந்தாண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியைப் பிடித்தது. பா.ஜ.கவிற்கு 77 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். இவர்களில் 10 எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட அம்மாநில பா.ஜ.க நிர்வாகிகள் அக்கட்சியின் வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறியுள்ளனர்.
தேர்தலுக்கு பின் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் மீது பா.ஜ.கவில் அதிருப்தி நிலவி வந்தது. இதனால், சமீபத்தில், ஒன்றிய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் அக்கட்சியின் வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறினார்.
இதைத்தொடர்ந்து மேற்கு வங்க மாநில பா.ஜ.க நிர்வாகிகள் பலரும் வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறினர். பா.ஜ.க வாட்ஸ்-அப் குழுவிலிருந்து வெளியேறிய எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட சுமார் 30 பேர் கொல்கத்தாவில் ரகசியமாகக் கூடி ஆலோசனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உத்தர பிரதேசத்தில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், பா.ஜ.க அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் சமாஜ்வாதி கட்சியில் சேர்ந்து வரும் நிலையில், மேற்கு வங்க பா.ஜ.கவிலும் பலர் அதிருப்தியில் இருந்து வருவது அக்கட்சித் தலைமைக்கு கடும் குடைச்சலை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
புகழ்பெற்ற மல்யுத்த வீரரை வீழ்த்திய வீராங்கனை... தோல்வியே சந்திக்காத இந்திய பெண்ணை கௌரவித்த Google!
-
இந்தியப் பெருங்கடலில் பல மடங்கு அதிகரித்த வெப்பநிலை : கால நிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என எச்சரிக்கை !
-
பிரஜ்வல் ரேவண்ணாவை பிரதமர் மோடி எதற்காக பாதுகாத்து வருகிறார்? : ராகுல் காந்தி கேள்வி!
-
மேற்கு வங்க ஆளுநர் மீதான பாலியல் புகார் : 8 பேர் கொண்ட குழுவை அமைத்து கொல்கத்தா போலீஸ் உத்தரவு !
-
ஊழியரை இரும்பு ராடால் தாக்கிய வழக்கில் கே.ஜி.எஃப் விக்கி கைது : போலிஸ் அதிரடி!