India
“பா.ஜ.கவை ஒழித்துக் கட்டுவோம்”: உ.பி தேர்தலில் அகிலேஷுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவிருக்கும் மம்தா பானர்ஜி!
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை எனவும், மம்தா பானர்ஜி, சமாஜ்வாதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, டிஜிட்டல் வடிவிலான பிரசாரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.கவில் இருந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மற்றும் 5 எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இது பா.ஜ.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சென்று பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சமாஜ்வாதி துணைத் தலைவர் கிரண் நந்தா, “மம்தா பானர்ஜி, காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள வாரணாசி வரவுள்ளார். அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் தேர்வான 3-வது லட்ச நபர்... பணி ஆணை வழங்கினார் முதலமைச்சர் !
-
ரூ.80.62 கோடி செலவில்... ஆவின் நிறுவனத்தின் சார்பில் முடிவுற்ற திட்டப்பணிகள் திறப்பு... - விவரம்!
-
ஓய்வுபெற்ற திருக்கோயில் பணியாளர்களுக்கு ரூ.2000 பொங்கல் கருணைத்தொகை.. வழங்கினார் முதலமைச்சர்!
-
மஹாராஷ்டிராவிலும் பிரிவினை ஏற்படுத்த நினைத்த அண்ணாமலை... தக்க பதிலடி கொடுத்த அரசியல் கட்சிகள்!
-
இந்திய கிரிக்கெட் அணியின் புதிய ஆல்ரவுண்டர்... அணி நிர்வாகம் இவரைத்தான் தேர்ந்தெடுத்துள்ளதா?