India
“பா.ஜ.கவை ஒழித்துக் கட்டுவோம்”: உ.பி தேர்தலில் அகிலேஷுக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவிருக்கும் மம்தா பானர்ஜி!
உத்தர பிரதேச சட்டமன்றத் தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி போட்டியிடவில்லை எனவும், மம்தா பானர்ஜி, சமாஜ்வாதிக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
உத்தர பிரதேசத்தில் வரும் பிப்ரவரி 10-ஆம் தேதி முதல் ஏழு கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. கொரோனா பரவல் அதிகரித்துள்ளதை அடுத்து, டிஜிட்டல் வடிவிலான பிரசாரம் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.
பா.ஜ.க, சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. பா.ஜ.கவில் இருந்த சுவாமி பிரசாத் மவுரியா உள்ளிட்ட 3 அமைச்சர்கள் மற்றும் 5 எம்.எல்.ஏக்கள் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தனர். இது பா.ஜ.கவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி உத்தர பிரதேச தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சிக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
முன்னதாக, மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தாவிற்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் நேரில் சென்று பிரசாரம் செய்தது குறிப்பிடத்தக்கது.
இதுதொடர்பாக சமாஜ்வாதி துணைத் தலைவர் கிரண் நந்தா, “மம்தா பானர்ஜி, காணொலி வாயிலாக பிரசாரம் மேற்கொள்ள வாரணாசி வரவுள்ளார். அந்த கூட்டத்தில் மம்தா பானர்ஜியும், அகிலேஷ் யாதவும் கலந்து கொண்டு பேசவுள்ளனர்.” எனத் தெரிவித்துள்ளார்.
Also Read
-
"தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம்" - அமைச்சர் தங்கம் தென்னரசு !
-
"தனி மனிதரை விட தத்துவங்கள்தான் அரசியலை வழிநடத்தும்" - சுதர்சன் ரெட்டிக்கு முதலமைச்சர் ஆதரவு !
-
Drop Test சோதனையை வெற்றிகரமாக செய்து முடித்த இஸ்ரோ... பத்திரமாக கடலில் இறங்கிய விண்கலன் !
-
அகற்றப்படும் பழைய பாம்பன் ரயில் பாலம்... நினைவு சின்னமாக பாதுகாக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை !
-
ஏமாற்றி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்ட பெண்கள்.. கரூர் பாஜக நிர்வாகியை கைது செய்த போலீஸ் !