India
இந்தியாவில் கொரோனா 3 வது அலை எப்போது குறையும்?.. IIT பேராசிரியர் கூறிய முக்கிய தகவல்!
இந்தியாவில் கடந்த ஏழுமாதங்களாக குறைந்து வந்த கொரோனா தொற்று கடந்த இரண்டு வாரங்களில் மின்னல் வேகத்தில் அதிகரித்துள்ளது. அதேபோல ஒமைக்ரான் தொற்றும் அதிகமாக பரவிவருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 1,94,720 பேருக்குப் புதிதாகத் தொற்று பதிவாகியுள்ளது.
இதனால் தமிழ்நாடு, டெல்லி, மாகாஷ்டிரா, கர்நாடகாக உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மீண்டும் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா பரவல் குறித்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்த உள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு 4 முதல் 8 லட்சம் வரை பதிவாகும் என்று மார்ச் வரை கொரோனா தொற்றின் பரவல் இருக்கக் கூடும் என ஐ.ஐ.டி பேராசிரியர் மனீந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து மனீந்திர அகர்வால் கூறுகையில், "மும்பை, டெல்லி ஆகிய நகரங்களில் அடுத்த 10 நாட்களில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டும். மூன்றாவது கொரோனா அலை மார்ச் மாதத்திற்குப் பிறகு நீடிக்கும் என்று கூறமுடியாது.
இந்த மாதம் இறுதியில் கொரோனா தொற்று உச்சத்தை எட்டும். அப்போது 4 முதல் 8 லட்சம் வரை கொரோனா தினசரி தொற்று பதிவாகும். கொரோனா தொற்று அதிகரித்தாலும் அது பெரிய பாதிப்புகளை ஏற்படுத்தாது.
ஊரடங்கு கட்டுப்பாடுகள் மூலம் கொரோனா மூன்றாவது அலை தாமதமாகலாம். இந்தியாவில் ஜனவரி இறுதியில் கொரோனா உச்சம் அடைந்து, மார்ச் மாதத்தில் முழுவதும் குறைந்து காணப்படும்" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
“வரலாற்றின் தொடர்ச்சியாக...நாம் விடுக்கும் அறைகூவல்!” : திமுக சார்பில் வீரவணக்க நாள் பொதுக்கூட்டங்கள்!
-
சாகித்ய அகாடமி நிறுத்தப்பட்டால் என்ன...“செம்மொழி இலக்கிய விருது” உள்ளது! : முதல்வரின் அதிரடி அறிவிப்பு!
-
“தமிழ்நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் அறிவுத்தீ பரவ வேண்டும்!” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
-
சென்னை மக்களே... இனி காற்றின் தரம் பற்றி நீங்களே தெரிஞ்சுக்கலாம்.. வருகிறது டிஜிட்டல் பலகை... - விவரம்!
-
“இருங்க பாய்... உங்க மூளைய இப்போ கசக்க வேண்டாம்...” - பழனிசாமியை குறிப்பிட்டு அமைச்சர் TRB ராஜா கலாய்!