India
கணவன் கண்முன்னே நேர்ந்த கொடூரம்.. மனைவியை பாலியல் வன்கொடுமை செய்த கும்பல்.. ம.பி-யில் அதிர்ச்சி!
மத்திய பிரதேச மாநிலம், ராஜ்கர் மாவட்டத்தைச் சேர்ந்த பெண்ணும் அவரது கணவர் மற்றும் குழந்தைகளும் கடந்த ஞாயிறன்று காரில் சுற்றுலா தளங்களுக்குச் சென்றனர்.
பின்னர் சுற்றுலா பயணத்தை முடித்துவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். ரஹோஹர் என்ற பகுதியில் வந்ந்துகொண்டிருந்தபோது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் காரை இடைமறித்து நிறுத்தியுள்ளனர்.
அப்போது அவர்கள் துப்பாக்கியைக் காட்டி காரில் இருந்து கீழே இறங்குமாறு மிரட்டியுள்ளனர். பின்னர் அந்தப் பெண் காரில் இருந்து கீழே இறங்கிய உடனே இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் அவரை இழுத்துச் சென்று வன்கொடுமை செய்துள்ளார்.
அப்போது அவரை தடுக்க முயன்ற கணவரை மற்றொருவர் துப்பாக்கியைக் காட்டி சுட்டுக் கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார். பிறகு இருவரும் மாறி மாறி அந்தப் பெண்ணை வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து அந்த பெண்ணின் கணவர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இந்த புகாரின் பேரில் போலிஸார் வழக்குப் பதிவு செய்து பெண்ணை வன்கொடுமை செய்த சோனு, சுமீர் சிங் பர்மீர் ஆகிய இரண்டு பேரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Also Read
-
“ஒருவேளை விஜய் வட இந்தியாவில் பிறந்திருந்தால்...” - கழக மாணவரணி செயலாளர் ராஜீவ்காந்தி தாக்கு!
-
முதலமைச்சருக்கு நன்றி : 'நான் முதல்வன் திட்டத்தில் பயின்று இஸ்ரோவுக்கு செல்லும் அரசுப்பள்ளி மாணவர் !
-
நிதி நிறுவன மோசடி... பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் பாராட்டு !
-
அகமதாபாத் விமான விபத்து : விபத்துக்கு விமானிகள் காரணம் என்பதை ஏற்கமுடியாது... விமானிகள் சங்கம் காட்டம் !
-
சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு 36.08 லட்சம் உதவித்தொகை... வழங்கினார் துணை முதலமைச்சர் உதயநிதி!