India
ஆன்லைன் வகுப்பின்போது வெடித்த செல்போன்.. 8ஆம் வகுப்பு மாணவனுக்கு ஏற்பட்ட கதி.. நடந்தது என்ன?
மத்திய பிரதேச மாநிலம், சந்த்குய்யா கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்பிரகாஷ் பதவுரியா. சிறுவனான ராம்பிரகாஷ் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
மத்திய பிரதேசத்தில் கொரோனா தொற்று காரணமாக இன்னும் முழுமையாகப் பள்ளிகள் திறக்கப்படவில்லை. நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பே நடைபெற்று வருகிறது.
இதனால் ராம்பிரகாஷ் வீட்டில் இருந்துகொண்டே ஆன்லைன் வகுப்பு வடித்து வருகிறார். இந்நிலையில் ராம்பிரகாஷ் பெற்றோர்கள் வீட்டில் இல்லா நேரத்தில் ஆன்லைன் வகுப்பு வாயிலாக கல்வி கற்றுக்கொண்டிருந்தார்.
அப்போது திடீரென செல்போன் வெடித்துள்ளது. இதில் சிறுவனின் முகத்தில் பலத்த தீக்காயம் ஏற்பட்டுள்ளது. வெடிச்சத்தம் கேட்டு அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் வீட்டிற்கு வந்து சிறுவனை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
சிறுவன் ராம்பிரகாச்ஷுக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Also Read
-
மகளிர் டி20: யாருக்கு உலகக் கோப்பை.. ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. தட்டிப்பறிக்குமா இங்கிலாந்து!
-
சர்வதேச அளவில் வைபவ் சூர்யவன்ஷியின் ஆட்டம் தொடக்கம்.. சச்சினை முந்திய வரலாற்று நிகழ்வு : முழு தகவல் அறிய!
-
கோவில் குடமுழுக்கில் பிரச்சனை.. தட்டிக்கேட்ட பெண்ணை கொடூரமாக தாக்கிய தவெக நிர்வாகி -கொந்தளிக்கும் மக்கள்!
-
தவெக அரசின் அட்டூழியம்.. புகாரை அடுக்கிய திமுக.. அதிர்ந்து போன ஆளுநர் மாளிகை! - முழு பட்டியல் இதோ!
-
FIFA 2026: திணறிய அர்ஜென்டினா.. உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கேப் வெர்டே அணி!