India
திருமண நிதி உதவிக்காக சகோதரியை கல்யாணம் செய்து கொண்ட சகோதரன்... உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேசத்தில் திருமண உதவி பெற சொந்த சகோதரியை, சகோதரனே திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், துந்தலா பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வரின் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் 51 திருமண ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த ஜோடிகளுக்கு ரூ.35 ஆயிரம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த திருமணம் குறித்த படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது. திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடியில் சகோதர, சகோதரி என்ற உண்மையை கிராம மக்கள் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கிராமத்திற்குச் சென்ற அதிகாரிகள் அவர்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிதி உதவிக்காகச் சொந்த சகோதர, சகோதரிகளே திருமணம் செய்துகொண்ட கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“சூனா பானா வேடம்... எகத்தாளத்தை பாருங்க… லொள்ள பாருங்க..” - பழனிசாமியை கலாய்த்த அமைச்சர் ரகுபதி!
-
தி.மலை அரசு மாதிரி பள்ளிக்கு முதல்வர் திடீர் Visit.. செஸ் போட்டியில் பதக்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு!
-
திருண்ணாமலையில் 2 நாட்கள் வேளாண் கண்காட்சி... அமைக்கப்பட்டுள்ள அரங்குகளின் விவரங்கள் உள்ளே!
-
திருவாரூர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் - அரவணைத்து கொண்ட திராவிட மாடல் அரசு!
-
“நலம் காக்கும் ஸ்டாலின் “ திட்டம் : 800 முகாம்கள் - 12,34,908 பேர் பயன்; அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!