India
திருமண நிதி உதவிக்காக சகோதரியை கல்யாணம் செய்து கொண்ட சகோதரன்... உ.பியில் அதிர்ச்சி சம்பவம்!
உத்தர பிரதேசத்தில் திருமண உதவி பெற சொந்த சகோதரியை, சகோதரனே திருமணம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், துந்தலா பகுதியில் கடந்த 11ஆம் தேதி முதல்வரின் திருமண உதவி திட்டத்தின் கீழ் ஒரே நேரத்தில் 51 திருமண ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டது. இந்த ஜோடிகளுக்கு ரூ.35 ஆயிரம் மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டது.
இதையடுத்து இந்த திருமணம் குறித்த படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளிவந்தது. திருமணம் செய்துகொண்ட ஒரு ஜோடியில் சகோதர, சகோதரி என்ற உண்மையை கிராம மக்கள் அதிகாரிகளுக்குத் தெரிவித்துள்ளனர்.
இதைக் கேட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அக்கிராமத்திற்குச் சென்ற அதிகாரிகள் அவர்களின் ஆதார் உள்ளிட்ட விவரங்களைச் சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமண நிதி உதவிக்காகச் சொந்த சகோதர, சகோதரிகளே திருமணம் செய்துகொண்ட கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
5 ஆண்டுகளில் TNPSC, தேசிய நலவாழ்வு குழுமம் மூலம் 48,418 பேருக்கு பணி ஆணை:அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!
-
அரசுக் கல்லூரிகளுக்கு தேர்வு செய்யப்பட்ட 5 உதவிப் பேராசிரியர்கள் : பணி ஆணைகளை வழங்கிய முதலமைச்சர்!
-
சிலிண்டர் தட்டுப்பாடு... மின்சாரம் யூனிட்டிற்கு ரூ.2 மானியம்... சலுகைகளை அறிவித்த முதலமைச்சர்!
-
“100 கி.மீ தூரத்திற்கு அரசுப் பேருந்துகளில் கட்டணமின்றி பயணம்!” : கிருஷ்ணகிரியில் துணை முதலமைச்சர் உரை!
-
“தி.மு.க. செய்த சாதனை என்ன என்பதை மக்கள் சொல்வார்கள்!” : பிரதமர் மோடிக்கு முரசொலி தலையங்கம் பதிலடி!