India
தலைமறைவாக இருந்தவரை சரமாரியாக வெட்டி சாய்த்த கும்பல்; கேரளாவில் பட்டப்பகலில் நடந்த பகீர் சம்பவம்!
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்திற்குட்பட்ட செம்பகமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுதீஷ். சுமை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மேலும் சுதீஷ் மீது அடிதடி, கொலை முயற்சி உள்ளிட்ட வழக்குகள் உள்ளன.
இந்நிலையில் , சுதீஷ் ஆற்றங்கல் பகுதியைச் சேர்ந்த சிலரிடம் தகராறு செய்ததாகக் கூறப்படுகிறது. அப்போது அந்த கும்பல் சுதீஷுக்கு கொலை மிரட்டல் விடுத்தது. இதனால், பயந்துபோன அவர் போத்தன்கோட் பகுதியில் உள்ள உறவினர்கள் வீட்டில் தலைமறைவாக இருந்துவந்தார். இதை அறிந்து கொண்ட அந்த கும்பல் அங்குச் சென்று அவரை சரமாரியாக வெட்டிக் கொலை செய்தது.
பின்னர், அங்கிருந்து அந்த கும்பல் இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவில் ஏறித் தப்பிச் சென்றது. இது குறித்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சுதீஷை கொலை செய்துவிட்டுத் தப்பிச் சென்ற ஆட்டோ ஓட்டுரை போலிஸார் கைது செய்து அவரிடம் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Also Read
-
Welcome On Board... இந்தா வச்சுக்கோ... அரசுப் பதவிகளில் ஆதிக்கம் செலுத்தும் விஜய் படக்குழுவினர்!
-
“உண்மையை தெரிந்துகொள்ளுங்கள் அமைச்சரே” : த.வெ.க-வுக்கு பதிலடி கொடுத்த சக்கரபாணி!
-
“அறிவாலயத்தின் அறிவாயுதமான முரசொலியின் பயணம் நூறாண்டுகள் கடந்தும் தொடர்க!” : கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின்!
-
தமிழ்த்தாய் வாழ்த்து பாடலுக்கு முதலில் விதை போட்டது கலைஞர் : பேரவையில் கோவி.செழியன் எம்.எல்.ஏ பேச்சு!
-
“Delimitation-ன் தொடக்கத்தில் கோலம் போட்டு விளையாடிக் கொண்டு இருந்தவர்தான் விஜய்!” : முரசொலி விமர்சனம்!