India
"முடிவெடுப்பதில் தாமதம்.. அரசின் கட்டமைப்பு சரியில்லை": நிதின் கட்கரி பேச்சால் பா.ஜ.க அதிருப்தி!
அரசின் கட்டமைப்பு சரியில்லாததால் திட்டங்கள் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது என ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளது பா.ஜ.க தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கட்டுமானம் சட்டம் மற்றும் நடுவர் மன்றம் தொடர்பான நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இதில் காணொளி காட்சி மூலம் ஒன்றிய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பங்கேற்றார்.
இந்நிகழ்வில் பேசிய ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரி," அரசின் திட்டங்களில் முடிவுகள் எடுப்பதில் தாமதம் செய்யப்படுகிறது. இது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. மேலும், முடிவுகளை எடுப்பதில் மிகவும் தாமதம் ஏற்படுவதால் திட்டங்களுக்கான செலவும் அதிகரிக்க வழிவகுக்கிறது.
இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் கட்டுமானமும் ஒன்று. இதை நாம் அனைவரும் அறிவோம். நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு செய்வதில் கட்டுமானத்துறை இரண்டாவது இடத்தில் உள்ளது.
நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்கள் தொடர்பான பிரச்சனைகளைத் தீர்க்க ஒன்றிய அரசு எப்போதும் முயற்சிகளை எடுத்து வருகிறது" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
”தலைநகரில் பேரறிஞர் அண்ணா சிலையின் மீது இழுக்கு… கொள்கையில்லா த.வெ.க கோமாளிகளின் அட்டூழியம்”
-
“காங்கிரஸின் குணம் வெளியானது... தோல்வியும் துரோகமும் எங்களுக்கு புதிது அல்ல”: டி.ஆர்.பாலு MP விளாசல்!
-
பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு இணையுமா? – ஒன்றிய அரசின் விவகாரம் – விஜய் எடுக்கும் முடிவு என்ன?
-
பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்... வாக்குப்பதிவு நாளில் சிறுமிக்கு பாலியல் தொல்லை.. TVK நிர்வாகி கைது!
-
“த.வெ.க.வினால் தலைகுனியும் தமிழ்நாடு” : தி.மு.க அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றச்சாட்டு!