India
"திறந்தவெளியில் தொழுகை நடத்துவதைப் பொறுத்துக்கொள்ள முடியாது": பா.ஜ.க முதல்வரின் பேச்சால் சர்ச்சை!
ஹரியானா மாநிலம், குர்கான் நகரில் தொழுகை நடத்துவதற்காக 2018ஆம் ஆண்டே இந்து மற்றும் முஸ்லிம்கள் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
சில நாட்களாக வலதுசாரி இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் முஸ்லிம்கள் தொழுகை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். மேலும் தொழுகை பகுதியில் மாட்டுச் சாணங்களைக் கொட்டி தொழுகைக்கு இடையூறும் செய்துள்ளனர்.
இதையடுத்து சீக்கிய மதத்தினர் தங்களின் கோயில்களில் முஸ்லிம்கள் தொழுகை செய்து கொள்ளலாம் என அறிவித்தனர்.பிறகு முஸ்லிம்கள் அங்குத் தொழுகை செய்தனர். இருப்பினும் குர்கான் பகுதியில் பதற்றமான நிலையே நீடித்து வருகிறது.
இந்நிலையில், முஸ்லிம்கள் திறந்த வெளியில் தொழுகை செய்வது பொறுத்துக்கொள்ள முடியாது என மாநில முதல்வர் மனோகர் லால் கட்டார் பேசியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து முதல்வர் மனோகர் லால் கட்டார்," திறந்த வெளியில் முஸ்லிம்கள் தொழுகை செய்வது சகித்துக்கொள்ள முடியாது. விரைவில் இதற்கு சுமுக தீர்வு எட்டப்படும். முஸ்லிம்கள் வீட்டிலோ அல்லது அவர்களது வழிபாட்டுத் தலங்களிலேயே தொழுகை செய்யலாம் என தெரிவித்துள்ளார்.
முதல்வர் மனோகர் லால் கட்டாரின் இந்த சர்ச்சைப் பேச்சுக்கு முஸ்லீம் அமைப்புகள் முதல் பலரும் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர். ஒரு மாநில முதல்வரே முஸ்லிம்களுக்கு எதிராக இருப்பது போல் அவரின் பேச்சு உள்ளது என பலரும் விமர்சித்து வருகின்றனர்.
Also Read
-
‘கொடநாடு’ என்று சொன்னாலே குலை நடுக்கம் ஏற்படும் பழனிசாமிக்கு! : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
-
ச்சீ... பெண்களை இழிவு செய்யும் அதிமுக நிர்வாகிகள்.. வேடிக்கை பார்க்கும் அதிமுக - பாஜக பெண் உறுப்பினர்கள்!
-
கிரிக்கெட்டின் சாம்ராஜ்ஜியம் 7ம் நம்பருக்கு ஓய்வு…தோனியின் சமூக வலைதளப் பதிவு வைரல்? - முழு விவரம் உள்ளே!
-
திமுக கூட்டணியில் விறுவிறுப்பாக நடைபெறும் தொகுதி பங்கீடு.. -6 கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எத்தனை?
-
வாக்காளர்களே... வாக்களிக்கும்போது அடையாள அட்டை கட்டாயம்.. என்னென்ன ஆவணங்கள் தேவை? - விவரம்!