India
இனி டீ கூட குடிக்க முடியாது.. வர்த்தக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை மீண்டும் உயர்த்திய மோடி அரசு!
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்ததிலிருந்தே பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. விலையைக் கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற கூட்டத்தில் கூட தி.மு.க நாடாளுமன்றக்குழு தலைவர் டி.ஆர். பாலு, பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்கக் கோரி நோட்டிஸ் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் மீண்டும் வர்த்தக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை ரூ.101 அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ரூ.2234க்கு சிலிண்டர் விலை உயர்ந்துள்ளது. ஏற்கனவே கடந்த மாதம் விலை உயர்த்தப்பட்டது. இந்த மாதம் முதல் தேதியிலேயே விலை உயர்ந்துள்ளது உணவக உரிமையாளர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.
இதையடுத்து மீண்டும் ரூ.101 க்கு விலை உயர்த்தப்பட்டுள்ள சாமானிய மக்களைக் கடுமையாகப் பாதிக்கும். மேலும் உணவகங்களில் கடுமையாக விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல் டீ, காபி விலையும் உயர வாய்ப்புள்ளது.
Also Read
-
“கமலாலயத்தில் இருக்கவேண்டியவர் ஆர்.என்.ரவி...” - Left Right வாங்கிய அமைச்சர் ரகுபதி!
-
TET விவகாரம் : “ஆசிரியர்கள் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்யவேண்டும்..” - பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
-
திமுக ஆட்சியில் 34 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உறுதிசெய்யப்பட்டுள்ளது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
-
கோவையில் TN Rising : முதலமைச்சர் முன்னிலையில் ரூ.43,844 கோடியில் 158 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்!
-
பாஜக அரசு இரயில்வே துறையில் செய்யும் வஞ்சகங்கள்... அம்பலப்படுத்திய சு.வெங்கடேசன் எம்.பி.!