India
வரதட்சணை பணத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.. மணமகளின் முடிவிற்குக் குவியும் பாராட்டு: காரணம் என்ன?
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி கன்வார். இவருக்கு கடந்த 21ம் தேதி பிரவீன் கிஷோர் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்காக அவரது தந்தை ரூ.75 லட்சம் வரை வரதட்சணை கொடுக்க இருந்தார். இதையறிந்த மணமகள் அஞ்சலி கன்வார், தனது தந்தையிடம் வரதட்சணை பணத்தில் பெண்கள் விடுதி கட்டும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர், மகளின் இந்த சேவை மனப்பான்மையைப் பார்த்த அவரது தந்தை கிஷோர் சிங் கானோட், தொகை ஏதும் குறிப்பிடாமல் Blank Cheque ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் 'உனக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ, அதை எழுதிக் கொள்' என்றும் மகளிடம் கூறியுள்ளார்.
மணமகள் அஞ்சலி கன்வாரின் இந்த முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே தனது பகுதியில் பெண்கள் விடுதி கட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
தொழிலாளர்களின் உண்மைத் தோழனாக திமுக என்றென்றும் திகழ்ந்திடும்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மே நாள் வாழ்த்து
-
“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
-
5 மாநில தேர்தல் : ஆட்சியை பிடிக்கப்போவது யார்? : வெளியான Exit Polls முடிவுகள்!
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!