India
வரதட்சணை பணத்தை இப்படியும் பயன்படுத்தலாம்.. மணமகளின் முடிவிற்குக் குவியும் பாராட்டு: காரணம் என்ன?
ராஜஸ்தான் மாநிலம் பார்மர் பகுதியைச் சேர்ந்தவர் அஞ்சலி கன்வார். இவருக்கு கடந்த 21ம் தேதி பிரவீன் கிஷோர் சிங் என்பவருடன் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்திற்காக அவரது தந்தை ரூ.75 லட்சம் வரை வரதட்சணை கொடுக்க இருந்தார். இதையறிந்த மணமகள் அஞ்சலி கன்வார், தனது தந்தையிடம் வரதட்சணை பணத்தில் பெண்கள் விடுதி கட்டும்படி கோரிக்கை வைத்துள்ளார்.
பின்னர், மகளின் இந்த சேவை மனப்பான்மையைப் பார்த்த அவரது தந்தை கிஷோர் சிங் கானோட், தொகை ஏதும் குறிப்பிடாமல் Blank Cheque ஒன்றை கொடுத்துள்ளார். மேலும் 'உனக்கு எவ்வளவு தேவைப்படுகிறதோ, அதை எழுதிக் கொள்' என்றும் மகளிடம் கூறியுள்ளார்.
மணமகள் அஞ்சலி கன்வாரின் இந்த முயற்சிக்கு சமூக ஊடகங்களில் பலரும் பாராட்டு தெரிவித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இவர் ஏற்கனவே தனது பகுதியில் பெண்கள் விடுதி கட்டிக் கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”ஓரணியில் திரள்வதை களம் உணர்த்துகிறது ; ஜனநாயகப் போர் அணியாக செயல்படுவோம்” : துணை முதலமைச்சர் உதயநிதி!
-
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் வங்கி தேர்வுகளுக்கு பயிற்சி : இந்த 3 மண்டலங்களில் பயிற்சி மையங்கள்!
-
28 வயதில் உயிரிழந்த இளம் கால்பந்து வீரர் : கண்ணீர் மல்க அஞ்சலி சொன்ன கிறிஸ்டியானோ ரொனால்டோ!
-
“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!
-
பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!