India
வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்து கொண்ட ஆளுநர் CONVOY ஓட்டுநர்: கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ். இவர் ஆளுநர் வாகனத்துடன் செல்லும் பாதுகாப்பு வாகனத்தின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதனால் கேரள ராஜ்பவன் வளாகத்திற்கு அருகே உள்ள ஓட்டுநர் குடியிருப்பில் தங்கி வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த சக குடியிருப்பு வாசிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரது அறையில் போலிஸார் ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முன்பு அவர், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதேபோல், தனிப்பட்ட பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்துள்ளார் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுநர் கான்வாய் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“ரயில் திட்டங்களில் தமிழ்நாடு முழுமுற்றாக புறக்கணிப்பு” : சு.வெங்கடேசன் எம்.பி கண்டனம்!
-
பட்ஜெட்டில் தமிழ்நாட்டை வஞ்சித்துள்ள ஒன்றிய அரசு : மெட்ரோ முதல் நிதிப்பகிர்வு வரை பெரும் ஏமாற்றம்!
-
ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கை - ஏமாற்றம்! ஏமாற்றம்! ஏமாற்றம்! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சனம்!
-
“சென்னையில் ஓமந்தூர் ராமாசாமிக்கு திருவுருவச் சிலை அமைக்கப்படும்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!
-
சர்வாதிகாரி பற்றியெல்லாம் பாடம் எடுக்க அருகதை இருக்கிறதா? : பழனிசாமிக்கு அமைச்சர் MRK கேள்வி!