India
வாட்ஸ் அப்பில் ஸ்டேட்டஸ் வைத்து தற்கொலை செய்து கொண்ட ஆளுநர் CONVOY ஓட்டுநர்: கேரளாவில் அதிர்ச்சி!
கேரள மாநிலம், ஆலப்புழா பகுதியைச் சேர்ந்தவர் தேஜஸ். இவர் ஆளுநர் வாகனத்துடன் செல்லும் பாதுகாப்பு வாகனத்தின் ஓட்டுநராக பணியாற்றி வந்தார். இதனால் கேரள ராஜ்பவன் வளாகத்திற்கு அருகே உள்ள ஓட்டுநர் குடியிருப்பில் தங்கி வந்தார்.
இந்நிலையில், இன்று அதிகாலை தனது அறையில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை அறிந்த சக குடியிருப்பு வாசிகள் போலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அங்கு வந்த போலிஸார் அவரது உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், அவரது அறையில் போலிஸார் ஆய்வு செய்தனர். முதற்கட்ட விசாரணையில் தற்கொலைக்கு முன்பு அவர், தற்கொலை செய்து கொள்ளப் போவதாக வாட்ஸ் அப் ஸ்டேட்டஸ் வைத்துள்ளது தெரிய வந்துள்ளது.
அதேபோல், தனிப்பட்ட பிரச்சனை காரணமாகத் தற்கொலை செய்துள்ளார் என்றும் போலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் இது குறித்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆளுநர் கான்வாய் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
“அடிப்படை வசதிகள் இல்லாத இரயில் நிலையங்களை சரி செய்வது எப்போது?” : ஆ.ராசா எம்.பி கேள்வி!
-
“நிதிச் சுமைக்கு எதிராக தமிழ்நாடு முன்வைத்த கோரிக்கையை பரிசீலிக்காதாது ஏன்?” : பி.வில்சன் எம்.பி கேள்வி!
-
“மாற்றுத் திறனாளிகளுக்கான வேலை வாய்ப்புக்கு ஒன்றிய அரசு செய்தது என்ன?” : கனிமொழி எம்.பி கேள்வி!
-
“பா.ஜ.க.வின் தேர்தல் தந்திர உத்தி ‘மக்களுக்கு புரியும்’ என்பது உறுதி!” : ஆசிரியர் கி.வீரமணி திட்டவட்டம்!
-
தமிழ்நாட்டில் 77% புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செயல்பாட்டிற்கு வந்துள்ளன : அமைச்சர் டி.ஆர்.பி ராஜா தகவல்!