India
“இந்தியாவுக்கு பெண்கள் தனியாக செல்ல வேண்டாம்”: அமெரிக்கா எச்சரித்தது ஏன் தெரியுமா?- மோடி ஆட்சியில் அவலம்!
இந்தியாவில் பா.ஜ.க ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பின்னர் வன்முறைகளும், பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களும் அதிகரித்துள்ளது உலக நாடுகள் மத்தியில் இந்தியாவின் மீதான மதிப்பைக் குறைத்து வருகிறது.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதால், பெண் சுற்றுலா பயணியர் இந்தியாவுக்கு தனியாக பயணம் மேற்கொள்ள வேண்டாம் என தங்கள் நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு டெல்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் அறிவுறுத்தியுள்ளது.
டெல்லியில் உள்ள அமெரிக்க துாதரகம் தங்கள் நாட்டு சுற்றுலா பயணியருக்கான பயண ஆலோசனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அதில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சுற்றுலாத் தலங்கள் உட்பட பல்வேறு இடங்களில் கொடூரமான வன்முறைகள், பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ளன.
எனவே அமெரிக்க சுற்றுலா பயணியர், குறிப்பாக பெண்கள் தனியாக இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள வேண்டாம்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இருந்து பயணம் மேற்கொள்வதற்கான பயண எச்சரிக்கை குறியீட்டில், மிகவும் குறைவான 'லெவல் 2' இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
முடிவடையும் இஸ்ரேல் - காசா போர் : அமைதி ஒப்பந்தத்துக்கு ஹமாஸ் ஒப்புதல் அளித்ததாக டிரம்ப் அறிவிப்பு !
-
இலங்கை கடற்படையால் 30 மீனவர்கள் கைது : நடவடிக்கை கோரி வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம் !
-
ரூ.49.59 கோடி - 23 புதிய திட்டப்பணிகள் : 5478 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர்!
-
சுற்றுலா தொகுப்புகள் மூலமாக தமிழ்நாடு அரசுக்கு 2.37 கோடி வருவாய் : அமைச்சர் இரா.இராஜேந்திரன் தகவல்!
-
கோவையில் 5 தளங்களுடன் கூடிய பிரம்மாண்ட ‘தங்கநகை பூங்கா’! : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்!